Monday, December 21, 2015

வீதி கலை இலக்கியக் களம், புதுக்கோட்டை. நிகழ்வு-22

கலை இலக்கியச் சுவை பருக வருக.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்துள் அமைந்துள்ள ஆக்ஸபோர்டு சமையற்கலைக் கல்லூரியில்....
27.12.2015 ஞாயிறு காலை 10.00 மணிக்கு....

கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள...வீதிகலை இலக்கியக் களத்தின் 22ஆவது நிகழ்விற்கு இலக்கிய ஆர்வலர் அனைவரையும் அன்புடன்  வரவேற்கிறோம்.

களத்தில் .....

கவிஞர்கள் மீரா.செல்வக்குமார், பவல்ராஜ், ரேவதி ஆகியோர் கவிதை வழங்கிட..

திருமிகு மூட்டாம்பட்டி ராஜு அவர்கள் சிறுகதை படைத்திட...

திருமிகு சுப்பிரமணியன் அவர்கள் ஓவியக்கட்டுரை கட்டுரைக்க...

முனைவர் துரைக்குமரன் ( நசிகேதன்) அவர்கள் “உப்புவேலி” என்னும் நூலை அறிமுகம் செய்ய..

திருமிகு கஸ்தூரி ரெங்கன் அவர்கள் ” தாமஸ்ஹார்டி” எனும் இலக்கியவாதி பற்றி அறிமுகம் செய்ய... 

யு.கே. இன்போ இணையம்-  கார்த்தி அவர்கள் வெள்ள நிவாரண களப்பணி  அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள...

அண்மையில் வெளியான தாரைதப்பட்டை, கொம்பன் திரைப்படங்களின் பாடலாசிரியர் புதுகை 
கவிஞர் இரா. தனிக்கொடி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க....
சிறப்பாக நடந்தேற உள்ள இலக்கிய விருந்தினைச் சுவைத்திட மகிழ்வுடன் அழைக்கிறோம்.


அழைப்பின் மகிழ்வில்...பாவலர்.பொன்.கருப்பையா.    
கவிஞர் மா.நாகநாதன்.