Tuesday, October 7, 2014

இந்தி ஆட்சி மொழியா?

             இந்தி, இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழி.எனவே இந்தியை நடுவணரசின் ஆட்சிமொழியாக்க வேண்டும் என்ற பிதற்றல்களோடு,  “தொடர்வண்டித் துறை, பொதுக் காப்பீட்டுத் துறை போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் கண்டிப்பாக இந்தி கற்றாக வேண்டும். இத்துறைகளின் சுற்றறிக்கைகள், அறிவிப்புகள் இந்தி மொழியில்  மட்டுமே வெளியிடப்பட வேண்டும்” என்ற அரசாணைகளும் பிறப்பிக்கப் பட்டுள்ளன. 

             இந்நிலையில் இந்தியின் தொன்மை,மேன்மை பற்றிய செய்தியினை மக்களறியச் செய்வது நமது கடமையாகும்.

          “இந்தி என்ற சொல்லே பாரசீகச் சொல். இந்தியாவுக்கு முகலாயர்கள் வந்த பிறகே இந்தியின் வரலாறு தொடங்குகிறது.. அதாவது நவீன இந்தி மொழியின் வயது வெறும் ஐநூறு ஆண்டுகள் மட்டுமே. முகலாயர்கள் இந்தியாவைக் கைப்பற்றியபோது வட இந்தியாவில் கரிபோலி, பிரஜ்பாசா, பண்டேலி, கனொவுஜி, அவாதி, மகதி, மைதிலி, போஜ்புரி, பாகேலி, சட்டீஷ்காரி மற்றும் பல வட்டார மொழிகள் வழங்கி வந்தன.

          வட்டார மொழியாக் இருந்த கரிபோலியுடன் சமஸ்கிருதக் கலப்பு ஏற்பட்டபோது பிறந்த மொழி இந்தியாகும். அதே கரிபோலி மொழியுடன் பாரசீக கலப்பு ஏற்பட்டபோது பிறந்த மொழி உருதுவாகும்..

         1800 ஆம் ஆண்டு வாக்கிலதான் இந்தி மொழியில் இலக்கியங்கள் தோன்றத் தொடங்கின. இந்த உண்மையை இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு ஒப்புக் கொண்டிருக்கிறார்.

          1959ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தி்ல் பேசும்போது    “ இந்தியாவின் மற்ற் மொழிகளைவிட இந்தி சிறந்தது என நான் ஒருபோதும் கூறமாட்டேன். இந்தி மொழியில் இருப்பதைவிட சிறந்த இலக்கிய வளம் நிறைந்த இந்திய மொழிகள் பல உண்டு. தமிழ், வங்காளி, மராட்டி போன்ற மொழிகளைவிட இந்தி உயர்ந்தது என்ற நிலையி்ல் நாம் இந்தியை அணுகவில்லை” எனக் கூறினார். -- ஆதாரம் -தென்செய்தி அக்.1-15,2014.

         இப்போது சொல்லுங்கள் “இந்தி, தொன்மையான, பெரும் பான்மையான, இலக்கிய வளம் செறிந்த மொழி , எனவே நடுவண் அரசின் ஆட்சிமொழி”  என்னும் கூற்று மெய்தானா? 

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

என்ன செய்வது ஐயா
இப்போது நேரு இல்லையே
நேரு போன்ற மனிதர்களும் இல்லையே

Kasthuri Rengan said...

பொய் பொய்...பொய்

Post a Comment