Monday, March 24, 2014

நேரு இளையோர் மையம்- தேசிய ஒருமைப்பாட்டு முகாம்

          21.03.2014 முதல் 24.03.2014 வரை நான்கு நாள்கள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளகாகத்தில் நடைபெற்ற நேரு இளையோர் மைய  தென்மாநிலங்களின் தேசிய ஒருமைப்பாட்டு முகாமின் மூன்றாம் நாள் 23.03.2014 அன்று பாவலர்  பொன்.கருப்பையா அவர்களின் மணிச்சுடர் கலைக் கூடம் சார்பாக “தமிழக நாட்டுப்புறக் கலைகளும் பண்பாடும்” என்னும் தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

                     ஓய்வு பெற்ற புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு லெ.பிரபாகரன் அவர்கள் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்தார்.

                 முகாம் ஒருங்கிணைப்பாளர் திரு க.சதாசிவம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

                  கருநாடக மாநிலம் தும்கூர், ஆந்திரமாநிலம் விசாகப் பட்டிணம், பாண்டிச்சேரி காரைக்கால், கேரளமாநிலம் பாலக்காடு, தமிழ்நாடு திருச்சி,புதுக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 120 நேரு இளையோர் மைய இளைஞர்கள் முகாமில் பயிற்சி பெற வந்திருந்தனர்.

                 தமிழக நாட்டுப் புற நிகழ்த்துக் கலைகளான கும்மி, கோலாட்டம். கரகம். காவடியாட்டம். ஒயில், துகிலாட்டம், ஆகிய வற்றுள் பொதிந்திருக்கும் மக்களின் பண்பாடு, நாகரிகம் ஆகியன பற்றிய தெம்மாங்குப் பாடல்களைப் பாவலர் பொன்.கருப்பையா மற்றும் சிதம்பர ஈசுவரன் ஆகியோர்,திருநாளுர் சண்முகம் தவில் இசையுடன் பாடியும் ஆடியும் பயிற்சியளித்தனர்.

                தொழில்முறை, தொழுமுறைப் பாடல்களின் கருத்தினை ஆங்கிலத்தில் பொன்.க விளக்கியதும் சிதம்பர ஈசுவரன் பெண் குரலில் பாடியதும் கருத்தரங்கப் பயிற்சியாளர்களை மிகவும் ஈர்த்தது.

             ஒவ்வொரு மக்களிசைப் பாடலின்போதும்  முகமையர் மேடையேறி ஆடியது அவர்களின் ஆர்வ மிகுதியை வெளிப்படுத்தியது.

            தேசிய ஒருமைப்பாடு, இளைஞர் பண்பாடு. மனிதநேயம், வாழ்வியல் மேன்மை குறித்த பாடல்களை முகமையர் மிகுந்த ஈடுபாட்டோடு சுவைத்துக் கற்றனர்.

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரத்தில் கண்டேன். வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in

Post a Comment