Thursday, December 19, 2013

வினாடி-வினா ( பாரதியார் ) சுற்று -3

பாரதியார் பிறந்தநாள் வினாடி-வினாப் போட்டியின் மூன்றாவது சுற்றில் கேட்கப்பட்ட வினாக்கள்.

                                             சுற்று - 3 ஞானப்பாடல்கள்

1.அச்சம் தேவையில்லையெனப் பாரதி கூறக் காரணம் என்ன?

2. காலனைப் பாரதி எவ்வாறு மதிக்கிறார்?

3. தெய்வம் என பாரதியார் கருதுவது எதனை?

4. பாரதி தன்னை யாரென வெளிப்படுத்துகிறார்?

5. எவற்றைச் சொப்பனமாகப் பாரதி கூறுகிறார்?

6. உயிர் துணிவுறுவது யாரால் எனப் பாரதி கூறுகிறார்?

7. எத்தகைய நெஞ்சம் வேண்டுமென்கிறார் பாரதி?

8. யாருக்கு அருள்வாய் என நெஞ்சிடம் உரைக்கிறார்?

9. எவை எங்கள் சாதி என்கிறார்?

10. அச்சமில்லை அச்சமில்லை எனும் பல்லவியின் அடுத்த வரி என்ன?

என்ன நண்பர்களே எல்லா வினாக்களுக்கும் விடை தெரியும் தானே?
ஒப்புநோக்க  “ மணிமன்றம் புதுகை” என்னும் வலைப்பக்கம் பாருங்களேன்.

No comments:

Post a Comment