Saturday, December 21, 2013

பாரதியார் -வினாடி-வினா, சுற்று 4

பாரதியார் பிறந்தநாள் விழாவில் நடத்தப்பட்ட வினாடி-வினா நிகழ்ச்சியின் நான்காம் சுற்று.

                                            சுற்று -4 முப்பெரும் பாடல்கள்

1. கண்ணன் பாட்டு முதல் பதிப்பு யாரால் எங்கு வெளியிடப்பட்டது?

2. தருமத்தின் வாழ்வதனைச் சூதுகவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும் - இவ்வரிகள் பாரதியாரின் எக்காவியத்தில்  யாருடைய கூற்றாக அமைந்துள்ளது?

3. பாரதி சின்னப்பயல் என்னும் ஈற்றடியைப் பாரதிக்குக் கொடுத்துப் பா புனையச் சொன்ன புலவர் யார்?

4. உன் கண்ணில் நீர்வழிந்தால் என்நெஞ்சில் உதிரம் கொட்டுதடி- இப்பாடல் வரிகளில் யாரை யாராகக் கண்டு பாரதி பாடியிருக்கிறார்?

5. துச்சாதனன் திரவுபதியின் கூந்தல் பற்றி இழுத்துச் செல்கையில் அதைத் தடுக்காது பார்த்துக் கொண்டிருந்தவர்களைப் பாரதி எவ்வாறு இழித்துரைக்கின்றார்?

6. காதல்  காதல்  காதல்,  காதல் போயின் சாதல் சாதல் சாதல் - இவ்வரிகள் இடம்பெற்ற பாரதியின் படைப்பு எது

7.வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி - கண்ணம்மா கூறிய வார்த்தைகளாகப் பாரதி கூறியுள்ள வரிகள் யாவை?

8. பாப்பா பாட்டு யாருக்காக எழுதப்பட்டது?

9.எவற்றைப் புசி நறுநெய் குளித்துச் சீவிக்குழல் முடிப்பேன் எனப் பாஞ்சாலி சபதமேற்றாள்?

10. கண்ணன் என்தாய் என்ற பாடல் முதன்முதலாக எப்போது எவ்விதழில் வெளியிடப்பட்டது?

என்ன நண்பர்களே விடைகள் கண்டுபிடித்து விட்டீர்களா?

சரிபார்க்க “மணிமன்றம்-புதுகை“ வலைப் பக்கம் பாருங்கள்.

Thursday, December 19, 2013

வினாடி-வினா ( பாரதியார் ) சுற்று -3

பாரதியார் பிறந்தநாள் வினாடி-வினாப் போட்டியின் மூன்றாவது சுற்றில் கேட்கப்பட்ட வினாக்கள்.

                                             சுற்று - 3 ஞானப்பாடல்கள்

1.அச்சம் தேவையில்லையெனப் பாரதி கூறக் காரணம் என்ன?

2. காலனைப் பாரதி எவ்வாறு மதிக்கிறார்?

3. தெய்வம் என பாரதியார் கருதுவது எதனை?

4. பாரதி தன்னை யாரென வெளிப்படுத்துகிறார்?

5. எவற்றைச் சொப்பனமாகப் பாரதி கூறுகிறார்?

6. உயிர் துணிவுறுவது யாரால் எனப் பாரதி கூறுகிறார்?

7. எத்தகைய நெஞ்சம் வேண்டுமென்கிறார் பாரதி?

8. யாருக்கு அருள்வாய் என நெஞ்சிடம் உரைக்கிறார்?

9. எவை எங்கள் சாதி என்கிறார்?

10. அச்சமில்லை அச்சமில்லை எனும் பல்லவியின் அடுத்த வரி என்ன?

என்ன நண்பர்களே எல்லா வினாக்களுக்கும் விடை தெரியும் தானே?
ஒப்புநோக்க  “ மணிமன்றம் புதுகை” என்னும் வலைப்பக்கம் பாருங்களேன்.

Wednesday, December 18, 2013

பாரதியார் பிறந்தநாள் - வினாடி-வினாப் போட்டி- இரண்டாம் சுற்று.

13.12.2013 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற பாரதியார் பிறந்தநாள் வினாடி-வினாப் போட்டியின் இரண்டாம் சுற்று வினாக்கள்

                         இரண்டாம்  சுற்று - பாரதியாரின் மொழிப் பற்று.

1. நெஞ்சை அள்ளும் காப்பியம் என எதைப்  பாரதியார் தன் பாடலில் குறிப்பிடுகிறார்.?

2. தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்.... இதன் அடுத்த வரி என்ன?

3. எதற்காக எட்டுத் திக்கும் சென்றிடுவீர்  எனப் பாரதியார் கூறுகிறார்?

4. புமிதனில் யாங்கனும் பிறந்ததில்லை என எம்மூன்று புலவர்களைப் பாரதியார் குறிப்பிடுகிறார்?

5. கற்றபின் நிற்க அதற்குத் தக எனும் குறள் கருத்தைப் பாரதியார் எப்படித் தன் ஆத்திச்சூடியில் கூறுகிறார்?

 6. சேமமுற வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டுமென்கிறார் பாரதி?

7. முத்தமிழ் மாமுனி நீள்வரையே நின்று மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு என்பதில் மாமுனி என யாரைக் குறிப்பிடுகிறார்?

8. பயில், பயிற்சி கொள் என எவற்றைப் பாரதியார் ஆத்திச்சூடியில் கூறுகிறார்?

9. எப்போது வாக்கினிலே ஒளி உண்டாகும் என்கிறார்?

10. எல்லையொன்றின்மை என்று எந்தக் கவிஞரரிக் கவியைப் பாரதி சுட்டுகிறார்?

என்ன? விடைகளைத் தந்துவிட்டீர்களா?  சரிபார்க்க “ மணிமன்றம், புதுகை” வலைப்பக்கம் வாருங்கள்

Sunday, December 15, 2013

பாரதியார் - வினாடி-வினாப்போட்டி -விடைகள்

 முதல் சுற்று - பாரதியாரின் நாட்டுப் பற்றுப் பாடல்கள்- விடை

1. எங்கள் மாநிலத் தாயை வணங்குதுமென்போம்.

2. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி... எனத் தொடங்கும் பாடலில்.

3. கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்.

4. அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்.

5. தனியொரு மனிதனுக் குணவில்லையெனில்.

6. காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வையை, பொருணைநதி.

7. திருநெல்வேலி ஆட்சியர் விஞ்ச் துரைக்கு வ.உ.சி. உரைத்தாக.

8. 1917 உருசியப் புரட்சியை... ஜார் மன்னனின் வீழ்ச்சியை.

9. கிளிக்கண்ணிகள் தலைப்பில் - நடிப்புச் சுதேசிகளைப் பழித்து.

10. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை... வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை.


ம்... எத்தனை மதிப்பெண்கள்?

Sunday, December 1, 2013

த.மு.எ.க.ச. நிருவாகிகள் கூட்டம்

            1.12.2013 அன்று த மு எ க ச புதுக்கோட்டை மாவட்டக் கிளையின் நிருவாகிகள் கூட்டம்  மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.க அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது.

          மாவட்டப் பொருளாளர்  மதியழகன் வேலையறிக்கை அளித்தார்.

கவிதைப் பயிற்சிப் பட்டறை நடத்துதல்,                                                           

குறும்படம், ஆவணப்படங்கள் பயிலரங்கம் ஆலங்குடியில் நடத்துதல் , 

உறுப்பினர் சேர்க்கை அதிகரித்தல், 

கிளைச் செயல்பாடுகள் மேம்பாட்டில் மாவட்டப் பொறுப்பாளர்கள் வேலைப் பகிர்வு

 முதலிய பொருள்கள் பற்றி கருத்துகள் பகிரப்பட்டன.

 மாநிலப் பொறுப்பாளர் கவிஞர் நா.முத்துநிலவன் உள்ளிட்ட மாவட்ட நிருவாகிகள் கலந்து கொண்டனர் .

 முனைவர் சு.மாதவன் நன்றி கூறினார்.