Friday, November 22, 2013

புதுக்கோட்டை கல்வி மாவட்ட அறிவியல் கண்காட்சி

     22.11.2013 அன்று புதுக்கோட்டை கல்வி மாவட்ட அறிவியல் கண்காட்சி திரு இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
அழைப்பின் பேரில் கண்காட்சியினைக் காணச் சென்றேன். ஒவ்வொரு அரங்கிலும் மாணவர்களின் அருமையான அறிவியல் படைப்புகள் செய்முறையோடு விளக்கப்பட்டன.

    முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்  திருமயம் கோட்டை மற்றும் ஆலயங்களில் கண்டுபிடித்து வெளிப் படுத்தியிருந்த  ஓவியக் கண்காட்சி அரங்கம் சென்றதும் அதிர்ந்து விட்டேன்.

         காரணம் இத்தனை ஆண்டுகள் மனித நாகரிக காலம் கி.மு. 5000 வரையிலும் அறியப்பட்டிருந்த நிலையில் கோட்டை மற்றும் நழுவப்படக் காட்சி ஆதாரங்கள் தென்தமிழக வரலாறு கி.மு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாக இருப்பது பெரும் வியப்பளித்தது.
அதைவிட அவ்வாதாரங்களை முதன்மைக் கல்வி அலுவலரே பார்வையாளர்களுக்கு விளக்கியது அதைவிட வியப்பு. இலக்கிய இலக்கண ஆய்வுகளில் புதிய புதிய பரிமாணங்களை ஆய்ந்து
வெளிப்படுத்திய முனைவர், வரலாற்றில் இத்தனை ஆழமாக, இதுவரை அறியப்படாத உண்மையினை வெளிக்கொணர்ந்துள்ளமை வரலாற்றாய்வாளர்களையே திகைக்க வைத்துள்ளது. 

அவரோடு இருந்து விளக்கங்கள் கேட்டறிந்த அந்தத் தருணம் ஒரு புதிய அனுபவம் .

இப்படியும் ஒரு அலுவலரா?

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வியப்பு தான்...

வாழ்த்துக்கள்...

Post a Comment