Thursday, October 10, 2013
Tuesday, October 1, 2013
திருக்கோகர்ணம் - நாட்டு நலப்பணித் திட்ட முகாமில்..
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட முகாமின் ஐந்தாம் நாள் நிகழ்வுகள் திருவப்புர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்துள் நடைபெற்றது.
மாலை நிகழ்வாக “ இயற்கையை நேசிப்போம் ” என்னும் தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் நலப்பணித் திட்ட மாணவர் களிடையே உரையாற்றினார்.
இயற்கையின் கொடைகளாக மனித சமூகம் பெறும் ஆற்றல்கள் பற்றியும், பல்லுயிரியப் பெருக்கம் நிலம், நீர், காற்று, வான், நெருப்பு ஆகிய ஐந்து மூலங்களின் சீற்றங்களும் அவற்றால் ஏற்படும் அழிவுகளையும் விவரித்துக் கூறினார்.
புவியைக் காத்திடும் இயற்கையை மனிதன் அழிப்பது சரிதானா? என்னும் பாடல் மூலம் இயற்கையை எவ்வாறு மாசின்றி, அழிவின்றிக் காப்பது என்னும் விளக்ங்கங்களையும் மாணவர்களுக்கு உணர்த்தினார்.
முகாம் மாணவர்கள் மிக்க ஈடுபாட்டுடன் இந்நிகழ்வில் பங்கேற்றது சிறப்பு
முகாமின் ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன் அவர்கள் நன்றி கூறினார்.
பெரியார் 1000 வினா-விடை - பரிசளிப்பு
29.09.2013 பிற்பகல் புதுக்கோட்டை நில அளவையர் கூட்ட அரங்கில் மாநில பெரியார் உயராய்வு மையம் நடத்திய “ பெரியார் 1000 வினா-விடை” ப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டஅளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.
மானமிகு மு.அறிவொளி அவர்கள் நிகழ்விற்குத் தலைமையேற்றார்.
மாவட்டச் செயலாளர் மானமிகு ப.வீரப்பன் அவர்கள் வரவேற்றார். ஆ.சுப்பையா, ரெ.புட்பநாதன், ரெ.மு.தருமராசு ஆகியோர் முன்னிலையேற்றனர்.
மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா வெற்றியாளர் களை அறிவிக்க, பெரியார் மணியம்மை பல்கலைக் கழக, பெரியார் சிந்தனை உயராய்வு மைய இணை இயக்குநர் மானமிகு முனைவர். க.அன்பழகன் அவர்கள் சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினார். மண்டல இளைஞரணிச் செயலாளர் மானமிகு அ.சரவணன் நன்றி கூறினார்.
மானமிகு மு.அறிவொளி அவர்கள் நிகழ்விற்குத் தலைமையேற்றார்.
மாவட்டச் செயலாளர் மானமிகு ப.வீரப்பன் அவர்கள் வரவேற்றார். ஆ.சுப்பையா, ரெ.புட்பநாதன், ரெ.மு.தருமராசு ஆகியோர் முன்னிலையேற்றனர்.
மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா வெற்றியாளர் களை அறிவிக்க, பெரியார் மணியம்மை பல்கலைக் கழக, பெரியார் சிந்தனை உயராய்வு மைய இணை இயக்குநர் மானமிகு முனைவர். க.அன்பழகன் அவர்கள் சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினார். மண்டல இளைஞரணிச் செயலாளர் மானமிகு அ.சரவணன் நன்றி கூறினார்.
Subscribe to:
Posts (Atom)