Saturday, September 14, 2013

உலக முதலுதவி நாள் - ரெட் கிராஸ் பயிற்சி




உலக முதலுதவி நாளில்...                        14.09.2013 அன்று புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரிக் கூட்ட அரங்கி்ல், உலக முதலுதவி நாளை முன்னிட்டு, மாவட்ட ரெட்கிராஸ் சங்கம், மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழு மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு      “ தேடுதல் மற்றும் மீட்பு” பயிற்சியினை நடத்தியது.

                      மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் செயலாளர் திரு ராஜா முகம்மது அவர்கள் தலைமையில் பயிற்சி தொடங்கியது ரெட்கிராஸ் மாவட்டத் தலைவர் திரு சீனு.சின்னப்பா அவர்கள் பயிற்சியினைத் தொடங்கி வைத்தார்.. அமைப்பின் பொருளாளர் திரு நாகப்பன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
ஒருங்கிணைப்பாளர் ஆர்ம்ஸ்ட்ராங் வரவேற்றார்.

                      மாவட்ட மீட்பு மற்றும் தீத் தடுப்பு நிலைய அலுவலர் திரு சத்திய கீர்த்தி அவர்கள்  பேரிடர், இயற்கைச் சீற்றம்,  வருமுன் காத்தல், வந்தபின் மேற்கொள்ள வேண்டியன, தீ.. விபத்துகள், தீத்தடுப்பு முறைகள், மீட்டல். தீயணைப்பான் வகைகள் பற்றி விளக்கமாகப் பயிற்சி யளித்தார்.

                     முன் அனுபவம் பெற்ற பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் தொண்டு நிறுவனம் மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவினர்க்கு வாயுத் தீயணைப்பானைக் கையாளும் முறை, மீட்டலில் உருவாக்கத் தூக்கி தயாரித்தல் ஆகியன பற்றிச்  செயல் விளக்கமளித்தார்.

                     எண்ணைத் தீயினை அணைக்கும் முறை செயல் விளக்கம் செய்து காட்டப் பட்டது. 

                     நிறைவு நிகழ்ச்சிக்கு வருகை தந்த செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் துணைத் தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்கள் பயிற்சி அளித்தவர் களையும் பயிற்சி பெற்றவர்களையும் பாராட்டிச் சான்றிதழ்களை வழங்கினார்.

No comments:

Post a Comment