Friday, September 27, 2013

வழக்காடு மன்றம் - அடப்பன் காரச்சத்திரம்

         27.09.2013 அன்று புதுக்கோட்டை அடப்பன்காரச் சத்திரத்தில் வைரம் மெட்ரிகுலேசன் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடை  பெற்றது. 

        அம்முகாமில் “ மனிதனை மாமனிதனாக்குவது சமுதாயமா?” என்னும் வழக்காடு மன்றம் நடைபெற்றது.

        வழக்காடு மன்றத்தின் நடுவராக புலவர் மகா.சுந்தர் செயல்பட்டார்.

       வழக்கினைத் தொடுத்த இராச.ஜெய்சங்கர் மனிதனை மாமனிதனாக்குவது சமுதாயம் என்பது குற்றம். வீடே ஒரு மனிதனை மாமனிதனாக்குகிறது என வழக்கினைத் தொடுத்தார்.

       வழக்கினை மறுத்த பாவலர் பொன்.கருப்பையா  சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள்   நட்பு வட்டாரம் சேவை அமைப்புகள் மனிதனுக்கு பட்டறிவினையும் சமூக ஈடுபாட்டையும் தருவன... அவ்வாறான சமூக ஈடுபாட்டாலேயே பெரியார், காந்தி, காமராஜ், அன்னை தெரசா, பெர்னாட்ஷா, அண்ணா, மார்க்ஸ் போன்றவர்கள் மாமனிதர்களாக விளங்குகின்றனர் எனச் சான்றுகளுடன் வழக்கினை மறுத்தார்.

         நிறைவில் வீடு நாற்றங்கால்... அது மனிதனை உருவாக்குகிறது.. சமுதாயம் விளைநிலம். ஆலமரமாக வளர்ந்து விழுதுகள் விட்டு ஒளிமயமான சமூகத்திற்கு வழி வகுக்கிறது எனவே “ மனிதனை மாமனிதனாக்குவது சமுதாயமே” என நடுவர் மகா.சுந்தர்  தீர்ப்பளித்து  வழக்கினைத் தள்ளுபடி செய்தார்.

      நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளரோடு, ஹரிமோகன், மஸ்தான் பஹ்ருதீன், பொன்.தங்கராசு, சந்துரு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment