Saturday, September 14, 2013

அக்சயா-ரீச்-காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு - காலாண்டுக் கூட்டம்.

                 .14.09.2013 காலை தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கூட்ட அரங்கி்ல், தமிழ்நாடு  அக்சயா திட்டத்தின் ரீச் தொண்டு நிறுவனமும், புதுக்கோட்டை காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கமும் இணைந்து நடத்திய காலாண்டுச் செயல்திட்டக் கூட்டம்  திரு ஆர்.ராஜ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

                 ரீச் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் பாண்டியன் வரவேற்றார்.

                காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்க மாவட்டச் செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் கலந்து கொண்டு கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

              1.கிராமங்கள் தோறும் காசநோய் பாதிக்கப் பட்டவர்கள் கணக்கெடுப்பினை மேற்கொள்வது.

              2. வரும் 17.09.2013 அன்று நமது இயக்கம் மூலம்  புதுக்கோட்டைத் தலைமை அரசு மருத்துவ மனையில் காசநோயாளிகளுக்கு சத்துணவுப் பயறு உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்குவது.

             3. தொண்டு நிறுவனங்களை மாவட்டக் காசநோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ்க் கொண்டுவர தமிழக அரசினைக் கேட்டுக் கொள்வது.

             
கூட்டத்தில்  இயக்கப் பொருளாளர் மாயழகு, துணைத் தலைவர் மேகலா, லெ.பிரபாகரன், தா.சிவராம கிருஷ்ணன், வீரமுத்து, பரமசிவம், வசந்தா, விஜயலெட்சுமி, மற்றும்  நேரு இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment