Thursday, August 15, 2013

கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஜெனிவா ஒப்பந்த விழாவில்

            .புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 14.08.2013 அன்று ஜெனிவா ஒப்பந்த நாள் விழா, பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் திரு இரா.முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

           பள்ளி ஜே.ஆர்.சி. ஆலோசகர் திருமதி ப.மேகலா விழா ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்திருந்தார்.

           திரு முருகன் அவர்களின் வரவேற்புரையினை அடுத்து, புதுக்கோட்டை மாவட்ட ஜே.ஆர்.சி செயற்குழு உறுப்பினர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் ஜெனிவா ஒப்பந்த வரலாறு, இன்றையப் போர்களும் பயங்கரவாதங்களும் மறைய நாம் மேற்கொள்ள வேண்டியன, எதிர்கால உலக அமைதிக்கான அறவழிகள், மனிதநேயம் மலர இளைய தலைமுறை மேற்கொள்ள வேண்டியன பற்றிய கருத்துரையினை வழங்கினார்.

        ஜே.ஆர்.சி மாணவர்களுக்கு மட்டுமல்லாது பள்ளி அனைத்து மாணவர்க்கும் தேவையான கருத்தாக அவரது பேச்சு அமைந்திருந்ததாக நன்றி கூறிய ஆசிரியர் சரவணன் குறிப்பிட்டார். 

No comments:

Post a Comment