Friday, August 23, 2013

போரில்லாப் புது உலகம் படைப்போம்...

                         .23.08.2013 அன்று முற்பகல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக புதுக்கோட்டை கடையக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியி்ல் ஹிரோசிமா-நாகசாகி நினைவு நாள் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி சே.பேச்சியம்மாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
                     
                      பள்ளி ஆசிரியர் திருமதி செ.தெய்வானை அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொருளாளர் திரு.லெ.பிரபாகரன் ஜப்பான் ஹிரோசிமா-நாகசாகியில் 1945ல் நடந்த அணுகுண்டு வீச்சின் வரலாற்றையும் அழிவினையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்

                    தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.க உலகெங்கும் தொடரும் அணுஆயுதப் போர்கள், அதன் விளைவுகள் மனிதகுல அழிவு பற்றி மாணவர் மனங்கொளத்தக்க வகையில் பாடல் கதைகள் மூலம் விளக்கினார்
அவர் தனதுரையில்  மத,இன, சாதி பேதங்கள் நீக்கப்பட வேண்டியதையும், மனிதநேயத்தோடு இளைய தலைமுறை வளர்ந்து போர்களே இல்லாத புது உலகத்தைப் படைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

                  நிறைவில் பள்ளி ஆசிரியர் திரு வெங்கடசுப்பிரமணியன் அவர்கள் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment