Friday, August 23, 2013

ஜூனியர் ரெட் கிராஸ் - செயற்குழு

                       23.08.2013 மாலை புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் அறையில், புதுக்கோட்டைக் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் இயக்கச் செயற்குழுக் கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

                 மாவட்ட ஜே.ஆர்.சி.அமைப்பாளர் திரு வி.இராஜேஸ் சீனிவாஸ் 2012-13 ஆண்டறிக்கையினை அளித்தார், அதனைத் தொடர்ந்து தணிக்கை செய்யப்பட்ட  நிதிநிலை அறிக்கை  பகிரப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
               புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் திரு. வெ.இராமச்சந்திரன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் திருமதி ஆ.சுசீலா, கவுரவ ஆலோசக  திரு த.இராமமூர்த்தி, இணை அமைப்பாளர்கள் ஹ.மீனாட்சி சுந்தரம், ஜே.அஜ்மீர் அலி, திருமதி சி.சாந்தி,  செயற்குழு உறுப்பினர்கள் திரு.கோ.முத்துரகுநாதன்,  திரு.சரவணன் ஆகியோர் அறிக்கை மற்றும் செயல் திட்டத்தின் மீதான கருத்துகளை வழங்கினர்.

              ஜே.ஆர்.சி.ஆலோசகர்களுக்கான ஒருநாள் முகாம் செப் 7 ல் கடையக்குடியில் நடத்துவது, 
            ஜூனியர்களுக்கான இரண்டுநாள் உண்டு உறைவிட பயிற்சி முகாம் முதல் பருவ விடுமுறையில் நடத்துவது,  
             கல்வி மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கும் ஜே.ஆர்.சி. இயக்க நடவடிக்கைகளை விரிவு படுத்துவது, 
            மெட்ரிக் பள்ளிகளை மேலும் அதிக அளவில் ஜே.ஆர்.சி இயக்கத்தில் இணைப்பது,                   கல்வி மாவட்ட அனைத்து ஜே.ஆர்.சி. இயக்கம் நடைமுறையில் உள்ள பள்ளிகளுக்கும் முதல் உதவிப் பெட்டி வழங்குவது                                                                                          ஆகிய முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன.

செயற்குழு உறுப்பினர் திரு. பாபு அவர்கள் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment