Tuesday, August 13, 2013

ஜெனிவா ஒப்பந்த நாள் - கருத்தரங்கம்


              புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப் பள்ளியி்ல், 12.08.2013 அன்று புதுக்கோட்டை கல்வி மாவட்ட ஜே.ஆர்,சி யின் சார்பாக ஜெனிவா ஒப்பந்த நாள் கருத்தரங்கம்  கௌரவ ஆலோசகர் திரு இராமமூர்த்தி அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது.

             புதுக்கோட்டை மாவட்ட ஜே .ஆர்.சி ஒருங்கிணைப்பாளர் இராஜேஸ் சீனிவாசன் வரவேற்புரையாற்றினார்.

          கருத்தரங்கில் மேனாள் இணை ஒருங்கிணைப்பாளர்  பாவலர் பொன்.கருப்பையாஅவர்கள் ஜெனிவாஒப்பந்தம் பற்றியும் மனித நேயம் பற்றியும் கருத்துரையாற்றினார்.

          அவர் தனது உரையில் ஜெனிவா ஒப்பந்தம் உருவாகக் காரண மாயிருந்த  ஜீன் ஹென்றி டுனாண்ட் அவர்களின் வாழ்க்கைவரலாற்றில்,  தான் நேரில் கண்ட சால்பரினோ போரின் அவலங்களையும் அதனால் உயிரிழந்த மக்களைக் காக்கப் போராடிய நிகழ்வுகளையும் தனது “சால்பரினோ நினைவுகள் “ என்னும் நூலில் பதிவு செய்திருந்தமையை விளக்கிக் கூறினார்.

        அந்நூலின் இறுதியில் தனது எதிர்காலக் கனவுகளாக இரண்டு செய்திகளைப் பதிந்திருந்தார்

        1. போரில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவ ஒவ்வொரு நாட்டிலும் நிவாரணச் சங்கம் அமைக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில்தான் ரெட்கிராஸ் இயக்கம் உருவானது.
       2. போர்களின்போது காயமுற்ற , உடல்நலம் குன்றியவர்க்கும் நிவாரணச் சங்க உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு  அளிக்க பன்னாட்டு சட்டதிட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். - இதன் அடிப்படையில் 1864ல் முதல் ஜெனிவா ஒப்பந்தம் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது

       இதனையடுத்து 1906ல் கடல்போரில் பாதிக்கப்ட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் விதிகள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது.

        1939ல் இரண்டாம் உலகப்போரில் போர்க்குற்றவாளிகளிடம் மனிதநேயம் என்ற கருத்தும், 
        1949 ஆகச்டு 12ல் போர்க்கைதிகளை நடத்தும் விதம், போரில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிகள், போரில் ஈடுபடாத மக்களுக்குப் பாதுகாப்பு, பற்றிய கூடுதல் தொகுப்புகள் இணைக்கப்பட்டு ஒரு முழுமையான ஜெனிவா ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஆகிய  வரலாற்றினைக் கூறி, இன்றைய நாளில் உலகெங்கும் தொடரும் பயங்கரவாதங்களும் அதன் விளைவுகளும் எப்படி மனிதகுலத்தைப் பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
ஆசை, கோபம், பொறாமை, இவற்றால் ஏற்படும் மத,சாதி,இன மோதல்கள் வன்முறைகள் மறைய இளைய தலைமுறையினர் மனதில் அன்பு, அறம், கருணை ஆகிய மனித நேயம் மலர்த்தப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

          நூற்றுக்கு மேற்பட்ட நகரளவுப் பள்ளி ஜீனியர்களும், ஆலோசகர் களும் கலந்து கொண்டு கருத்தரங்கைச் சிறப்பித்தனர்.

       ஜே.ஆர்.சி. மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு மீனாட்சி சுந்தர்,திருமதி சாந்தி, திரு அஜ்மீர்அலி, ஆகியோர் கருத்தரங்க நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.

        நிறைவில் இணை ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தி நன்றியுரையாற்றக் கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment