Monday, August 12, 2013

நாகசாகி நினைவு நாளில்...

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.

            தமிழ்நாடு அறிவியல் இயக்கப் புதுக்கோட்டை கூட்ட அரங்கத்தில் 09.08.2013 அன்று நாகசாகி நினைவு நாள் கூட்டம்  த.நா.அ.இயக்க மாவட்டத் தலைவர் அ.மணவாளன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
        
       புதுக்கோட்டை துளிர் இல்லக் குழந்தைகளுக்கு ஹிரோஷிமா நாகசாகி அழிவு பற்றியக் கருத்துப் பொதிந்த ஓவியப் போட்டி நடத்தப் பட்டது.

      கலந்து கொண்ட அனைத்து துளிர் இல்லத்தினருக்கும் நூல்கள் வழங்கப் பட்டது.

       மாவட்டச் செயலாளர் திரு வீரமுத்து அவர்கள் வரவேற்புரை யாற்றினார்.

       மாநிலப் பொருளாளர் திரு லெ.பிரபாகரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 
       மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் வெற்றி பெற்ற, கலந்து கொண்ட மாணவர்களைப் பாராட்டியும் அணுவின் சக்தி ஆக்கத்திற்கு மட்டுமே... அழிவுக்குப் பயன்படலாகாது எனப் பேசினார்.

       மாவட்டத் தலைவர் திரு செயபாலன் அவர்கள் நன்றியுரை யாற்றினார்.

       செயற்குழு உறுப்பினர்கள்  சேதுராமன், குமரேசன், தா.சிவராம
கிருஷ்ணன், மற்றும் மாவட்ட , வட்டக்கிளைப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment