Sunday, July 7, 2013

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்.


                   2013 சூலை 4,5 நாள்களில்,புதுக்கோட்டை தேர்வு அரங்கில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ்  புதுக்கோட்டை வருவாய் மாவட்டப் பள்ளிகளில்  ஒன்பது, பத்தாம் வகுப்புத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பணிமனைப்  பயிற்சி நடைபெற்றது. 

                 திருவாளர்கள் நா.முத்துநிலவன், திருமுருகன், வள்ளியப்பன், செயலெட்சுமி ஆகிய மாநிலப் பயிற்றுநர்களுடன் பாவலர் பொன்.கருப்பையா தமிழ் செய்யுள் பகுதியினை இசையோடு கற்பிக்கும் வல்லுநராகக் கலந்து கொண்டு, முதன்மைப் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சியளித்தார்.

                 மாணவர் பின்பற்றத் தக்க எளிய இசையோடு செய்யுள் பகுதி கற்பிக்கப் படும்போது அதன் இசையோடு பாடுபொருளின் கருத்து பசுமரத்தாணியாக மாணவர் மனங்களில் பதியும் என்பதால், செய்யுள் பகுதியினை இசையோடு கற்பித்தல் நல்ல பலனளிக்கும் என விளக்கினார்.

               குறிப்பாக மனப்பாடப் பகுதிச் செய்யுள்கள் இசையோடு கற்பிக்கப் படும்போது  எளிதாக மாணவர் மனங்களில் பதியும் எனும் தனது பட்டறிவோடு  அப்பகுதிகளைப் பாடிக்காட்டி பயிற்சியாளர்களைப் பின்பற்றிப் பாடச்செய்து பயிற்சியளித்தார். முதன்மைப் பயிற்சியாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றது சிறப்பாக இருந்தது.

No comments:

Post a Comment