Monday, July 22, 2013

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
             தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட மாநாடு 20.07.2013 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் லெ.பிரபாகரன் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.

           வரவேற்புரையினை மாவட்ட இணைச்செயலாளர் மஸ்தான் பக்ருதீன்  ஆற்றினார். மாநிலப் பொதுச்செயலாளர் எம்.எஸ். ஸ்டீபன்நாதன் தொடக்க உரையாற்றினார்.

         அதனையடுத்து “இயற்கை வள மேலாண்மை “ என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா தலைமையேற்றார்.

           அவர் தனது உரையில் புவியின் இயற்கை வளங்களைக் காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பாடத்திட்டத்தில் இயற்கை வள மேலாண்மை பற்றிய பாடங்கள் வைக்கப் படவேண்டியதையும், பல்லுயிர் சமநிலையே உலகின் உயிரின நிலைப்புக்கு அடித்தளம் என்பதையும் இளைய தலைமுறையினருக்கு இயன்ற வழிகளிலெல்லாம் உணர்த்தும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கருத்துகளைப் பதிவு செய்தார்.

           அடுத்து ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை  அறிவியல் அறிஞர் இரா.இராஜ்குமார்  இயற்கை வேளாண்மை பற்றிய கருத்துரையினை வழங்கினார்.

No comments:

Post a Comment