Friday, June 28, 2013

முனைவர் பட்ட பொது வாய்மொழித் தேர்வு.

கல்வி கரையில.... 
                   
                  இன்று 28.06.2013 பிற்பகல்  புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் , எனது இனிய நண்பரும் மணிமன்ற உறுப்பினருமான கவிஞர் வீ.கே.கஸ்தூரிநாதன் (எ) வீ.கருப்பையன் அவர்களுக்கான  முனைவர் பட்ட பொது வாய்மொழித் தேர்வு நடைபெற்றது.

               “ மெய்ப்பாட்டு நோக்கில் மறுமலர்ச்சிப் பாடல்கள் ” எனும் தலைப்பில் ஆய்வேடு அளித்திருந்தார்.  தமிழகத்தின் தலைசிறந்த 16 மரபுக்  கவிஞர்களின் மறுமலர்சிப் பாடல்களை நுணுகி ஆய்ந்திருந்தார். 
               சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் மு.பழனியப்பன் அவர்கள் வழிகாட்டலில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டிருந்தது.

               தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இலக்கியத்துறை பேராசிரியர் முனைவர் இரா. காமராசு அவர்கள் புறத்தேர்வாளராக வாய்மொழித் தேர்வினை நடத்தினார். 
ஆய்வின் முக்கிய கருத்துகளை ஆய்வாளர் வழங்க பொது மதிப்பீட்டாளர்களால் வினாக்கள் தொடுக்கப் பட்டு விளக்கங்கள் பெறப்பட்டன.

               மாமன்னர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் சு.மாதவன், முனைவர் செல்வராசு, முனைவர் முருகானந்தம், கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் கண்ணன் ஆகியோர் ஆய்வு பற்றிய வினாக்களைத் தொடுத்தனர். 

             பேராசிரியர் வீ.வைத்தியநாதன், புலவர் மு.பா, மு.முத்துசீனிவாசன், நிலவை பழனியப்பன், இரா.சம்பத்குமார், பாவலர் பொன்.கருப்பையா,  சுகுமாரி, மகாசுந்தர் , மாமன்னர் கல்லூரி ஆய்வுப்பட்ட மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.

            பொது மதிப்பீட்டாளர்களின் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் புறத்தேர்வாளர்  முனைவர் இரா.காமராசு அவர்கள்,  வீ.கருப்பையன்  அவர்களை அவரது ஆய்வுக்காக மதிப்புறு முனைவர் பட்டத் தகுதிக்கு பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு பரிந்துரை செய்தார். 

          மாமன்னர் கல்லூரி தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் சி.சேதுராமன் அவர்கள் முன்னிலையில்  நடந்த நிகழ்ச்சி பாராட்டிற்குரியதாக அமைந்திருந்தது.

1 comment:

Rathinam Padmanaban said...

Visit our Blog.

kasthurinathan.blogspot.com

Post a Comment