Tuesday, June 11, 2013

காசநோய்த் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையம்

                .புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கூட்ட அரங்கில் 11.06.2013 அன்று  மாவட்ட காசநோய்த் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையச் செயற்குழுக் கூட்டம்  திரு இராஜ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
           
              ரீச் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் திரு அலெக்ஸ் பாண்டியன், மறுவாழ்வு மையச் செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா, செயற்குழு உறுப்பினர்கள் திரு.லெ.பிரபாகரன், திரு.த.சிவராம கிருஷ்ணன், சிறப்பு அழைப்பாளர்கள் ம.வீரமுத்து, ஆர்.சுப்பிரமணியன், முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

             கூட்டத்தில் எதிர்வரும் 18.06.2013 அன்று மாவட்ட அரசுப் பொது மருத்துவமனையில் காசநோயாளர்களுக்கு “காசநோயாளர் உரிமைகளும் உய்வும்“ எனும் தலைப்பில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது என்றும், கருத்தாளர்களாக பாவலர் பொன்.கருப்பையா, திரு லெ.பிரபாகரன் ஆகியோர் நோயாளர்களுடன் கலந்துரையாடுவது என்றும்.. உரிமைகள் பற்றிய ஒளிப்பட உரை நிகழ்த்துவது என்றும் முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன.

No comments:

Post a Comment