Wednesday, May 15, 2013

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                        தமிழ்நாடு அறிவியல் இயக்க வளர்ச்சி உபகுழு மாநில மாநாடு, புதுக்கோட்டையில் 2013 மே ,14,15  ஆகிய இருநாள்கள் நடை பெற்றது. 
                      முதல்நாள் மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் முனைவர் மணி அவர்கள் தலைமையேற்றார். மாநிலத் துணைத் தலைவர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் மாநாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தினார்.
                      புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் திரு லெ.பிரபாகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கன்னியாகுமரி மாவட்ட மலர் குழுவின் “ இயற்கையோடு வாழப் பழுகு மனிதா” என்ற பாடலோடு மாநாடு தொடங்கியது. 
                     மாநிலப் பொதுச் செயலாளர் திரு ஸ்டீபன் நாதன்  அவர்கள் மாநாட்டினைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
                     மாநிலத் துணைத் தலைவர் பேராசிரியர் மோகனா அவர்கள் பெண்களும் வாழ்வாதாரங்களும்  பற்றி உரைவீச்சு நிகழ்த்தினார். பேரா.இராசமாணிக்கம் அவர்கள்  பெண்களைப் பாதிக்கும் வாழ்வியல் சிக்கல்கள் பற்றி விளக்கினார்.
                     மலர் குழு அனுபவங்கள் பற்றி தேவி அவர்களும், துளிகள் பணிகள் பற்றி விருதுநகர் தமிழரசி அவர்களும் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.
                   பிற்பகல் அமர்விற்கு திரு தியாகு அவர்கள் தலைமையேற்றார்.                                                           பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் எழுதி இசையமைத்த “ புமியைக் காத்திடும் இயற்கையை மனிதன் அழிப்பது சரிதானா? என்ற பாடலோடு  இரண்டாம் அமர்வு தொடங்கியது. 
திரு டி.பி.ரெகுநாத் அவர்கள் இயற்கை வளங்கள் மீட்சி பற்றியும், சிரவாக் கோட்டை இராமலிங்கம் அவர்கள் கனிமவளங்கள் அரசியலார், வலியோரால் அபகரித்து அழிக்கப் பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
                  திரு நாராயணமூர்த்தி  அவர்கள் நீர் மேலாண்மை பற்றி கருத்துரை வழங்கினார்.

15.05.2013 இரண்டாம் நாள் மாநாடு பாவலர் பொன்.க .வின் “பெண்ணினமே நிமிர்ந்து எழுகவே“ “ அழகிய புமியில் அமைதிப் பு மலரவேண்டும்“ ஆகிய பாடல்களோடு தொடங்கியது.                                            காலை அமர்விற்கு திரு இராஜ்குமார் அவர்கள் தலைமையேற்றார். திரு காமேஸ் அவர்கள் நீர்ச்சேமிப்பு பண்ணைக் குட்டைகள் பற்றியும்,  திரு இரமேஸ்பாபு கடற்கரை சார்ந்த வாழ்வாதாரப் பாதிப்புகள் பற்றியும் கருத்துரை வழங்கினர். 
                   குழு விவாதத்திற்குப் பின்னர் நிறைவு விழாவிற்கு திரு எஸ்.டி.பாலகிருஷ்ணன் தலைமையேற்றார். திரு எஸ்.சுப்பிரமணியன் நிறைவுரையாற்ற மாநாடு சிறப்பாக முடிவுற்றது.

No comments:

Post a Comment