Sunday, March 24, 2013

கலிலியோ துளிர் இல்ல நிகழ்வு

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                             23.03.2013 அன்று புதுக்கோட்டை கலீப் நகர் கலிலியோ துளிர் இல்லத்தில் உலக சிட்டுக்குருவிகள் நாள், உலக வன நாள், உலக நீர் வள நாள் ஆகிய மூன்று சிறப்பான நாள்கள் பற்றிய கருத்துப் பகி்ர்வு நிகழ்த்தப்பட்டது.
                            துளிர் இல்லச் செயலாளர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் உலக நீர் வள நாள் பற்றிய கருத்துரையினைத் துளிர் இல்லத்தாருக்கு வழங்கினார்.
                          அவர் தனது உரையில் இன்றைய நிலையில் நீர் வளப் பாதிப்பு, அதற்கான காரணங்கள், நீர் மாசு மற்றும் பற்றாக்குறை நோய் பாதிப்பு, மழைநீர் சேகரிப்பு, நீர் நிலைகளைப் பாதுகாத்தலின் அவசியம், பாதுகாக்கப்பட்ட குடிநீ்ர் வழங்குவதில் அரசின் கடமை பற்றிய கருத்துகள் பற்றி துளிர்களோடு விவாதித்தார்.
                        நிறைவாக பிறந்தநாள், குடும்ப சிறப்பு விழா நாள்களில் மரக்கன்றுகள் நட்டுப் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

                         அதனைத் தொடர்ந்து. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர்   திரு கா.செயபாலன் வனப் பாதுகாப்பு பற்றியும், நகரத் துளிர் இல்ல அமைப்பாளர்                   திரு ஆர்.சுப்பிரமணியன்  சிட்டுக் குருவிகள் பாதுகாப்பு பற்றியும் கருத்துரை வழங்கினர்.

                        தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் அவர்கள் காணொளிக் காட்சி மூலம்  புவியின் நீர் வளம் பற்றிய கருத்துகளை வழங்கினார். துளிர் இல்ல உறுப்பினர்களின் துடிப்பான ஈடுபாட்டுடன் விவாதம் நடைபெற்றது.
                        நிறைவாக துளிர் இல்லப்  பொருளாளர் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment