Friday, March 22, 2013

அனைத்துலகத் தண்ணீர் நாள்

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.

                     22.03.2013 அனைத்துலகத் தண்ணீர் நாள்.  இந்நாளினையொட்டி  அறந்தாங்கிக் கல்வி மாவட்டம், அரிமளம் தாஞ்சூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒரு விழிப்புணர்வுக் கூட்டத்தினை நடத்தியது.
               
                 இக்கூ்ட்டத்திற்குப் பள்ளிக் கல்வியாளர் திரு ஆவுடை முத்து தலைமையேற்றார்.  ஆசிரியர் திருமதி பெ.சித்ராதேவி வரவேற்புரை யாற்றினார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா                         “ நீரின்றி“......என்னும் தலைப்பில் பாடல் கதைகளுடன் தொடக்க உரையாற்றினார். 
              
                அருகி வரும் தண்ணீர் பிரச்சனைகள், தண்ணீர் பற்றாக்குறைக்கான சமூகக் காரணிகள், இயற்கையைப் பேண வேண்டியதன் அவசியம், தண்ணீர் மாசுபாடுகளும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் பற்றியும் தனது உரையில் மாணவர்களுக்கு உணர்த்தினார்.

              அடுத்து, காணொளிப் படக்காட்சிகளுடன் மாணவர்களுக்கு தண்ணீரின் இன்றியமையாமை, தண்ணீர் வறட்சி நோய்கள், தண்ணீர் பற்றிய அரசின் கொள்கை பற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் துணைச் செயலாளர் திரு எஸ்.டி.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். 

               மாவட்ட அறிவியல் இயக்கச் செயலாளர் திரு கா.செயபாலன், துளிர் இல்ல நகர அமைப்பாளர் திரு ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். 

             பள்ளி மாணவர்கள் தண்ணீர் பற்றிய பாடல், ஆடல், பேச்சு, நாடகம் எனப் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தியது சிறப்பாக இருந்தது.  நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியர் செல்வநாயகி தயாரித்திருந்தமை பாராட்டிற்குரியது. 

            இந்நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவர் திரு மு.சரவணன், சத்துணவு அமைப்பாளர் திருமதி பிரேமா, பெற்றோர் அருணாசலம், முதலியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாகப் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதிபெ.சித்ராதேவி நிகழ்ச்சியின் சிறப்பினைச் சொல்லி நன்றி கூறினார்.


No comments:

Post a Comment