Saturday, March 2, 2013

புதுக்கோட்டை-கவிஞர் மன்றக் கூட்டம்

             24.02.2013 அன்று மாலை புதுக்கோட்டை கவிஞர் மன்றத்தின் திங்கள் கூட்டம் புதுக்கோட்டை பாலபவனத்தில் நடைபெற்றது.
புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் தலைவர் மு.முத்து சீனிவாசன் தலைமையேற்றார். கவிஞர் மன்ற நிருவாகி நிலவை பழனியப்பன் வருகைதந்திருந்த கவிஞர்களை வரவேற்றார்.

     பாவலர் பொன்.கருப்பையா “ பெண்ணினமே நிமிர்ந்து எழுகவே“ எனும் பாடலோடு கூட்டத்தினைத் தொடங்கி வைத்தார். அவர் தனது உரையில் படைப்பாளிகள் சமூக மாற்றத்திற்காக படைப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் பிரச்சனைகளைச் சுட்டுவதோடு கவிஞனின் கடமை முடிவதில்லை. அப்பிரச்சனைகளுக்கான தீர்வினை அப்படைப்பாளி தனது படைப்பில் சுட்ட வேண்டும் என்று பேசினார்.
       
        திருக்குறள் கழகத் தலைவர் பா.இராமையா, ஆனந்தஜோதி திங்களிதழ் ஆசிரியர் மீரா சுந்தர், கவிஞர்கள் முத்துப் பாண்டியன், ஷெரிப், கவிபாலா, பீர்முகம்மது, பொன்னையா, ஆ.சா.மாரியப்பன், மற்றும் இளங்கவிஞர்கள் தங்களது கவிதைகளை மன்றத்தில பதிவு செய்தனர். மன்றப் பொறுப்பாளர் கவிஞர் கஸ்தூரிநாதன்  நன்றி கூறினார்

No comments:

Post a Comment