Tuesday, March 12, 2013

                 9.03.2013 அன்று பிற்பகல் 4.00 மணிமுதல் 6.00 மணிவரை, புதுக்கோட்டை டி.வி.எஸ் குடியிருப்புப் பகுதி கலிலியோ துளிர் இல்லக் கூட்டம் , தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் திரு செயபாலன் அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் ஆர்.சுப்பிரமணியன் முன்னிலையேற்றார். துளிர் இல்லத் தலைவர் வரவேற்றார்.
                 தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள், துளிர் இல்ல உறுப்பினர்களுக்கு எளிய அறிவியல் ஆய்வுகளைச் செய்து காட்டி, மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மை, படைப்பாற்றல் திறன் வளர்க்கும் வழிமுறைகளை விளக்கினார்.
                   மாணவர்கள் செலவில்லாத எளிய அறிவியல் ஆய்வுகளையும், குறைந்த செலவில் செய்து பார்க்கக்கூடிய ஆய்வுகளையும் செய்து பார்த்து மகிழ்ந்தனர். அனைத்துத் துளிர்களும் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.
                 திரு சுப்பிரமணியன் அவர்கள் “துளிர்“ அறிவியல் திங்களிதழ் பற்றியும் அவ்விதழில் மாணவர் பங்கு பற்றியும் உரையாற்றினார்.
                 துளிர் இல்லச் செயலாளர் நன்றி கூறக் கூட்டம் இனிதே முடிந்தது.

No comments:

Post a Comment