Thursday, February 23, 2012

புதிய தலைமுறை -இது எப்படிப் பெற்ற சுதந்திரம்?

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                   புதிய தலைமுறை அறக்கட்டளையும் காந்தி கல்வி நிலையமும் இணைந்து, புதுக்கோட்டை  கைக்குறிச்சி வெங்கடேசுவரா கல்வி நிறுவனத்தில், 2012 பிப் 9 மற்றும் 10 ஆகிய இருநாள்கள்  இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்த ஒளிப்படக் கண்காட்சி மற்றும் பயனுள்ள வாழ்க்கைக்குத் தேவையான பண்புகள் குறித்த பயிற்சி முகாமினை ” இது எப்படிப் பெற்ற சுதந்திரம்?” என்னும் தலைப்பில்  சிறப்பாக நடத்தியது. 
           அம்முகாமில் பாவலர் பொன் கருப்பையா அவர்கள் 10.02.2012  முற்பகல் அமர்வில் ”தியாக மனப்பான்மை” என்னும் தலைப்பில் கருத்துரையாற்றினார். 
தனது  உரையில் நாட்டின் விடுதலைக்காக உடல். பொருள், ஆவியினைத் தியாகம் செய்த மாந்தர்களின் அருஞ்செயல்களை விளக்கி இன்றைய இளைஞர்களின் சிரமங்களை நோக்கிப் பயணிக்கும் போக்கினை மாற்றி சிகரங்களை நோக்கிச் செல்ல வேண்டிய பாதைகளுக்கான பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். 
               புதிய தலைமுறை அறக்கட்டளை  புதுக்கோட்டை மாவட்ட  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு ந.சுதாகர் அவர்கள் வரவேற்க, மாவட்ட நுகர்வோர் சங்கச் செயலாளர் பொறியாளர் சு.தனவேலு அவர்கள் தலைமை உரை யாற்றினார். மேனாள்  தலைமைப் பொறியாளர் பொறி. சொக்கலிங்கம் அவர்கள் முன்னிலையுரையாற்றினார். நிறைவில் கல்லூரியின் முதல்வர் திருமதி பிரின்சி இமாகுலேட் அவர்கள் நன்றியுரையாற்றினார்.  

No comments:

Post a Comment