Wednesday, December 14, 2011

நேரு யுவ கேந்திரா - கலைவிழா

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                14.12.2011 அன்று புதுக்கோட்டையில் இந்திய அரசு நேரு யுவ கேந்திரா புதுக்கோட்டைக் கிளையும் புதுக்கோட்டை சுழற்கழகமும் இணைந்து  இளையோர்க்கான மாவட்ட அளவிலான கலை விழாவினைச் சிறப்பாக நடத்தினர்.
                
               மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் இளையோர் மன்றத் தினர் முற்பகல் நடைபெற்ற  கலைப் போட்டிகளில் கலந்து கொண்டனர். நாட்டுப் புறப் பாடல்கள். கிராமிய தனி நடனம்,  கரகம், பரதநாட்டியம், குழு நடனங்கள் ஆகியவற்றில் போட்டிகள் நடைபெற்றன.

              பாவலர் பொன்.கருப்பையா, கவிஞர் ஆர்.நீலா ஆகியோர் போட்டி நடுவர்களாக இருந்து மாநிலப் போட்டிக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்தனர்.

              பிற்பகல்  வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் கலை நிறைவு விழா, புதுக்கோட்டை சுழற்கழகத் தலைவர் ரொட்டேரியன் என்.கனகராசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

              திரு சேது.கார்த்திகேயன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் திரு லெ.பிரபாகரன் மற்றும்  நகர்மன்ற உறுப்பினர் சையது இபுறாகிம் ஆகியோர் முன்னிலையேற்றனர்.

             நேரு யுவ கேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. க.சதாசிவம் அவர்கள் விழாவின் நோக்கவுரையாற்றினார்.  புதுக்கோட்டை மகாராணி சுழற்கழகத் தலைவி திருமதி ராணி கனகராசன், மேனாள் தலைவர் திரு செந்தி, ஏஞ்சல் வேர்ல்டு அறக்கட்டளை நிருவாக இயக்குநர்
திரு . ஜே.ஆரோக்கியராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். போட்டிகளின் பங்கேற்றவர், போட்டிகளின் சிறப்புப் பற்றி பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் உரையாற்றினார்.

             வெற்றியாளர்களை கவிஞர் ஜீவி அவர்கள் பாராட்டிப்பேசிப் பரிசுகளை வழங்கினார்.. நிறைவாக சுழற்கழகப்  பொருளாளர் திரு.ஆரோக்கியசாமி அவர்கள் நன்றி கூற நாட்டுப் பண்ணுடன் விழா முடிவுற்றது.

No comments:

Post a Comment