Wednesday, December 14, 2011

நேரு யுவ கேந்திரா - கலைவிழா

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                14.12.2011 அன்று புதுக்கோட்டையில் இந்திய அரசு நேரு யுவ கேந்திரா புதுக்கோட்டைக் கிளையும் புதுக்கோட்டை சுழற்கழகமும் இணைந்து  இளையோர்க்கான மாவட்ட அளவிலான கலை விழாவினைச் சிறப்பாக நடத்தினர்.
                
               மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் இளையோர் மன்றத் தினர் முற்பகல் நடைபெற்ற  கலைப் போட்டிகளில் கலந்து கொண்டனர். நாட்டுப் புறப் பாடல்கள். கிராமிய தனி நடனம்,  கரகம், பரதநாட்டியம், குழு நடனங்கள் ஆகியவற்றில் போட்டிகள் நடைபெற்றன.

              பாவலர் பொன்.கருப்பையா, கவிஞர் ஆர்.நீலா ஆகியோர் போட்டி நடுவர்களாக இருந்து மாநிலப் போட்டிக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்தனர்.

              பிற்பகல்  வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் கலை நிறைவு விழா, புதுக்கோட்டை சுழற்கழகத் தலைவர் ரொட்டேரியன் என்.கனகராசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

              திரு சேது.கார்த்திகேயன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் திரு லெ.பிரபாகரன் மற்றும்  நகர்மன்ற உறுப்பினர் சையது இபுறாகிம் ஆகியோர் முன்னிலையேற்றனர்.

             நேரு யுவ கேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. க.சதாசிவம் அவர்கள் விழாவின் நோக்கவுரையாற்றினார்.  புதுக்கோட்டை மகாராணி சுழற்கழகத் தலைவி திருமதி ராணி கனகராசன், மேனாள் தலைவர் திரு செந்தி, ஏஞ்சல் வேர்ல்டு அறக்கட்டளை நிருவாக இயக்குநர்
திரு . ஜே.ஆரோக்கியராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். போட்டிகளின் பங்கேற்றவர், போட்டிகளின் சிறப்புப் பற்றி பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் உரையாற்றினார்.

             வெற்றியாளர்களை கவிஞர் ஜீவி அவர்கள் பாராட்டிப்பேசிப் பரிசுகளை வழங்கினார்.. நிறைவாக சுழற்கழகப்  பொருளாளர் திரு.ஆரோக்கியசாமி அவர்கள் நன்றி கூற நாட்டுப் பண்ணுடன் விழா முடிவுற்றது.

பாரதியார்-130 பிறந்தநாள் விழா - நாடகம்

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
        
                      11.12.2011 அன்று, புதுக்கோட்டை ஐசுவர்யா கூட்ட அரங்கில், புதுக்கோட்டை கவிராசன் இலக்கியக் கழகம் மற்றும் உலகத் திருக்குறள் பேரவை இணைந்து நடத்திய ”கவிராசன் பாரதி விழா” சிறப்பாக நடைபெற்றது.
            
                   கிரவுன் சிட்டி சுழற்கழகத் தலைவர் ரொட்டேரியன் மு.அப்துல் சலாம் அவர்கள் தலைமையேற்க முனைவர் மு.பழனியப்பன் அவர்கள் வரவேற்புரை யாற்றினார்.
                       
                         உலகத் திருக்குறள் பேரவையின் பொதுச்செயலாளர் புலவர் தி.சு.மலையப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
                       
                        இயற்றமிழ் பற்றி இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள்  உரைவீச்சு நிகழ்த்தினார்.  
                      
                      இளந்திரு கி.அரிமோகன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. 
                     
                        நாடகத் தமிழ் பற்றி பாவலர் பொன்.கருப்பையா அவர்களின் முன்னுரையோடு, அவர் எழுதி இயக்கிய, புதுகை மணிச்சுடர் கலைக்கூடம் சார்பான ” இவர்களும் இன்றும்” என்னும் நாடகம் சிறப்பாக நடைபெற்றது. 

                     நாடகத்தில் தமிழின் சிறப்பு, தாய்மொழி வழிக்கல்வி, பெண் சமத்துவம், பொதுவுடைமை, சாதி மதப் பிணக்குகள், அந்நிய முதலீடு, நதிநீர்ப் பிரச்சனை, நாட்டு ஒருமைப் பாடு, மனிதநேயம்  ஆகியவற்றின்  இன்றைய நிலைப் பாடும் அவற்றிற்கான தீர்வுகள் பற்றிய அன்றையச் சான்றோர் களாகிய திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் சிந்தனைகளும்  நாடக உரையாடல்கள் வாயிலாக நடித்துக் காட்டப் பட்டது.
                    
                   இந்நாடகத்தில்  திருவள்ளுவராக புலவர் மு.பாலசுப்பிரமணியன் அவர்களும், பாரதியாராக புலவர் மகா.சுந்தர் அவர்களும், பாரதிதாசனாராக தமிழாசிரியர் வள்ளியப்பன் அவர்களும்,  கூத்தனாக காப்பாளர் சிதம்பர ஈசுவரன் அவர்களும், நல்லமுத்துவாக உடற்கல்வி ஆசிரியர் இராச.ஜெய்சங்கர் அவர்களும் நடித்தனர். தலைமை ஆசிரியர் க.மதிவாணன் கதைமாந்தர்களை ஒப்பனையில் உருவாக்கியிருந்தார். 
                   
                  இசைப் பாடல்களோடும் நகைச்சுவையோடும் நடைபெற்ற இந்நாடகத்திற்கு இளந்திரு கி.அரிமோகன் இசையமைத்திருந்தார்.  
                
                 விழாவின் சிறப்பாக மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்களுக்கு ”மகாகவி பாரதியார் விருது” வழங்கிச் சிறப்பிக்கப் பட்டது. 
                  
                  சிறப்பு விருந்தினர்களை உலகத் திருக்குறள் பேரவையின் மாவட்டத் தலைவர் திரு சண்முக பழனியப்பன் அவர்கள் அறிமுகம்  செய்து வைத்தார். 
                   
                  விருது பெற்ற கவிச்சுடர் கவிதைப் பித்தன் அவர்களை கவிராசன்  இலக்கியக் கழகத் தலைவர் கவிஞர் நா.கண்ணன் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.
                
                    முன்னாள் அமைச்சர் உபத்துல்லா உள்ளிட்ட புதுக்கோட்டையின் இலக்கிய அமைப்பினரும் பொதுமக்களும் அரங்கு நிறைத்து விழாவினைச் சுவைத்தனர்.
               
                  பாடல் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
              
                   விழாவினை ஒருங்கிணைத்து நடத்திய கவி .முருகபாரதி அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

பேரிடர் மேலாண்மை

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                       01.12.2011 புதுக்கோட்டை அசோக்நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சியளிக்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர் திருமதி இலாகிஜான் அவர்கள் வரவேற்றார். நகர்மன்ற உறுப்பினர்திரு க.பாண்டியன் தலைமையேற்றார். பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு சபாரெத்தினம் அவர்கள் முன்னிலையேற்றார்.
                     
                    இயற்கைச் சீற்றங்கள் எதனால் ஏற்படுகின்றன? அவற்றைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் மேற்கொள்ள வேண்டிய இன்றியமையாப் பணிகள் என்னென்ன? என்பதைப் பற்றி மாணவர் மனங்கொள்ளத் தக்க வகையில்  கருத்தாளர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர்  பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் விளக்கினார்.
                    
                    இயற்கைச் சீற்றங்களிலோ, திடீர் நோய்களினாலோ, எதிர்பாராத விபத்துகளினாலோ பாதிக்கப் பட்டவர்களை எவ்வாறு மீட்க வேண்டும், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும்  என்பனவற்றைச் செயல் விளக்கங்களோடு பயிற்சியளித்தார். 
             குறிப்பாக நீரில் மூழ்கியவரை நீளக் கயிறு கொண்டு மீட்டல், தீ, புகை சூழ்ந்த மாடிப் பகுதியில் சிக்கி மயக்கமுற்றவரை தவழ்ந்து மீட்டல், தீயணைப்பவர் தூக்கு மூலம் மீட்டுக் கொணர்தல், சாலை விபத்து, கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டல், மயக்கமுற்றவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வருதல் , செயற்கைச் சுவாசமளித்தல், நெஞ்சழுத்த முறையில் இதயத் துடிப்பை மீளச் செய்தல், இரத்த ஒழுக்கை நிறுத்தும் வழி முறைகள், எலும்பு முறிவுகளுக்கு முக்கோணக் கட்டுத் துணி கொண்டு கட்டுகள் போடுதல், காயம் பட்டவரை ஒருவராக, இருவராக, நால்வர் சேர்ந்து தூக்கிச் செல்லுதல்,உருவாக்கத்தூக்கிகள்தயாரித்தல்ஆகியவற்றில்பயிற்சிஅளிக்கப்பட்டது.                                                                                                                 
                     முதலுதவியில் பயன் படும் முடிச்சுகள் போடுவது பற்றிய பயிற்சியும் அளிக்கப் பட்டது, 
மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பயிற்சி பெற்றனர். நிறைவாக பள்ளிப் பட்டதாரி ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க நகரச் செயலாளருமான திரு பழனிச்சாமி அவர்கள் நன்றியுரையாற்றினார்.