Wednesday, November 30, 2011

நேரு யுவ கேந்திரா- முப்பெரும் விழா

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
            29.11.2011 அன்று, புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரிக் கலை அரங்கில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி ப.மகேஸ்வரி அவர்கள் தலைமையில், நேரு இளையோர் மையத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. மாவட்ட இளையோர் எழுச்சிக் கூட்டம், மாவட்ட அளவிலான சிறந்த இளையோர்க்கு விருது வழங்கும் விழா, இளையோர் மன்றங்களுக்கு விளையாட்டுப் பொருள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நிரல்பட நிகழ்ந்தன. திருமதி இராஜேஸ்வரி வரவேற்புரையாற்றினார். மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் திரு க.சதாசிவம் அவர்கள் விழாவின் நோக்க உரையாற்றினார். புத்தா தற்காப்புக்கலை இளையோர் மன்ற சேது கார்த்தி கேயன், இமயமலையேற்றப் பயிற்சி பெற்ற செல்வி கண்மணி ஆகியோர்க்கு சிறந்த இளையோர்க்கான விருதுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
        தொடர்ந்து ஒரு இலட்ச ரூபாய் மதிப்பிலான விளையாட்டுப் பொருள்களை இளையோர் மன்றங்களுக்கு வழங்கி ஆட்சியர் தலைமையுரையாற்றினார். அவர் தனது உரையில் இளைஞர்கள் குறிக்கோளோடும் தன்னம்பிக்கை யோடும் செயல்பட்டால் சாதனைகள் படைத்து தானும் உயர்ந்து நாட்டையும் உயர்த்தலாம் எனக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.முத்துக்குமரன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திரு வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான், மாமன்னர் கல்லூரி முதல்வர் திரு எஸ்.கார்த்திகேயன், திரு தளபதி மாணிக்கம், மாமன்னர் கல்லூரித் தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் திரு.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பிற்பகல் நடைபெற்ற கருத்தரங்கில் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் ”நாட்டுப் புறக் கலைகாட்டும் இளையோர் பண்பாடு” என்னும் தலைப்பில் நாட்டுப்புறப் பாடல்களோடு இன்றைய இளைஞர்களின் நோக்கும் போக்கும் சிறக்க உரையாற்றினார். ஒருமைப்பாடு, பயங்கரவாதத்திற்கு எதிரான அறவழி, சமூக மேம்பாட்டில் இளையோர் பங்கு, வரதட்சணை மறுப்பு,  சாதிமத பேதமற்ற சமுதாய மலர்ச்சி ஆகிய கருத்துகள் கொண்ட பாடல்களால் இளையோர் மனதில் எழுச்சியுறச் செய்தார். நிறைவாக சேது கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Tuesday, November 29, 2011

சமூக நலத்துறை முதியோர் நாள் விழா

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
29.11.2011 அன்று  காலை 10.30 மணிக்கு புதுக்கோட்டை காவலர் மன்றத்தில், புதுக்கோட்டை சமூக நலத்துறையின் சார்பாக முதியோர் நாள் விழா கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி ப.மகேஸ்வரி அவர்கள் தலைமையேற்றார். மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி பெ.விஜயராணி அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி க.கௌசல்யா, சமூகசேவகர் புலவர் பொன்.கருப்பையா, கண்ணப்ப நாயனார் கண்தான இயக்கத் தலைவர் திரு.சி.கோவிந்தராசன், மாவட்ட நுகர்வோர் குழு பொதுச் செயலாளர் திரு சு.தனவேலு,  புலவர் மா.நாகூர், ரீகோ தொண்டு நிறுவன அமைப்பாளர் திருமதி பிரான்சிஸ் லில்லி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். குடும்ப வன்முறை பாதுகாப்பு அலுவலர் திருமதி ஆர்.சுப்புலெட்சுமி நன்றியுரையாற்றினார்.

                 தலைமையுரையில் மாவட்ட ஆட்சியர் முதியோர்  முதுமையை எண்ணிக் கவலைப் படாமல், தன்னம்பிக்கையுடனும். மகிழ்சியுடனும் இருக்க வேண்டும் எனவும் தங்களுக்குள்ள பிரச்சனைகளுக்கு மாவட்ட சமூக நலத்துறையினை  அனுகித் தீர்வுகாண வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.                              சமூக சேவகர் புலவர் பொன்.கருப்பையா அவர்கள் தனது உரையில் முதுமை சாபமல்ல அது ஒரு வரம், முதிர்ச்சியான அனுபவங்களே எதிர்கால சமூகத்தினரை வழி நடத்தும் முதியோரின் கூட்டுக்குடும்ப நெறியால் ஏற்படும் நல் விளைவுகளையும், முதியோரைப் புறக்கணிப்போர் படும் இன்னல் களையும் விளக்கி, மாண்புகளை மலர்த்திய மூத்தோர்களைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நிறைவாக முதியோரை வாழ்த்திக் கீழ்க்காணும் பாடலை இசையுடன் பாடி அனைவரையும் மகிழச் செய்தார். விழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர்களும் திரளான முதியோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பாடல்.
தத்துவமாய்   விளங்கும்   முதுமக்களே - என்றும்                                                                                            முத்தாய்நல்  மொழிகூறி  வாழ்த்துவமே                             --தத்துவமாய்

சிந்தையில்   ஊறியநல்  எண்ணங்களால் - அருஞ்                                                 
 செயல்பல   ஆற்றினர்   வண்ணங்களாய்                                                                       
முந்தைய    அனுபவத்   தொன்மங்களால் - எங்கும்                                                
 முகிழ்த்தன  பயன்விளை  நன்மைகளே                           -- தத்துவமாய்

வீரத்தில்    உயர்ந்தோங்கும்   சூரர்களாய் - நெஞ்ச                                                   
 ஈரத்தில     சுமைதாங்கித்        தீரர்களாய்                                                                  
சாரத்தால்  நிறைத்திட்டார்  சாதனைகள் - உப                                                            
காரத்தால்  ஓங்குமவர்   போதனைகள்                               --தத்துவமாய்

வாழ்க்கையில்  குறுக்கிட்ட  தடைகடந்தும் - பெரும்                                             
வறுமையை    வென்றுமே     வளமைகண்டார்                                                                  
தாழ்விலும்      நிறைவென்னும்  உயர்வுகொண்டார் - புதுத்                           
தலைமுறை   மேம்பட     வழிகள்தந்தார்                           --தத்துவமாய்

புல்நுனிப்       பனிபோலே    நிலையாமை - அதைப்                                                 
புரியாதோர்  சினம்கொள்வார்  அறியாமை                                                          
வில்லினில்  கணையேற்றும்  வெகுளாமை - நீக்கிச்                                             
சொல்லுக்குள்  சுவைசேர்ப்பார்  பெரும்பான்மை          --தத்துவமாய் 

சிற்பமாய்ச்  செதுக்கிய    சொந்தமெல்லாம் -தம்மை                                                    
அற்பமாய்   ஒதுக்கியும்   குமுறல்கொள்ளார்                                                        
அற்புதக்     கரங்களினால்  அரவணைப்போம் - அவர்                                                 
 பொற்பதம்  காட்டிய  வழிநடப்போம்                                    --தத்துவமாய்

Monday, November 21, 2011

வாசிப்பு இயக்கம்

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                          புதுக்கோட்டை பெரியார் நகரில் 20.11.2011 மாலை பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் தலைமையில் ” வாசிப்பு இயக்க”த் திங்கள் கூட்டம் நடைபெற்றது. இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சுவாதி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கவிஞர் கீதா அவர்கள் ” என் பெயர் மரியாட்டு ” என்னும் நூலினை வாசித்து, புரட்சிக் காரர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான கனட நாட்டுச் சிறுமி தன் மன உறுதியினால் ஒரு சமூக மாற்றப் படைப்பாளியாக உயர்ந்த கதையினை உரிய உணர்ச்சிகளோடு அவைக்கு வழங்கினார்.
புலவர் மகா சுந்தர் அவர்கள் வாசிப்பு இயக்கம் வலுப்பெறும் வழிமுறை களையும் வளர்ச்சிப் படிநிலைக் கூறுகளையும் விளக்கினார். இரா.சம்பத்,  புலவர் மு.பா, கவிஞர் கஸ்தூரிநாதன், எய்ம்ஸ் கந்தசாமி, பீர்முகமது, சுரேசு,முகேசு, முத்துச்சாமி,திரைப்பட இயக்குநர் முரளி அப்பாஸ், கவிஞர் தங்கம் மூர்த்தி ஆகியோர் வாசிப்பு இயக்கம் வலுப்பெற அரிய ஆலோசனை களை வழங்கினர். கலந்துரையாடலின் தொகுப்பாக, வாசிப்பு, இளைய தலைமுறைக்கு வழிகாட்டத் தக்கதாக அமைய, சமூக மேம்பாட்டுப் படைப்பாளிகளின் நூல்களைத் திங்கள் தோறும் ஒரு இலக்கிய ஆர்வலர் ஆய்ந்து, அப்படைப்பு பற்றிய கருத்தினை திங்கள் கூட்டத்தில் வழங்கி பங்கேற்போர்களின் கருத்துப் பகிர்வு மேற்கொள்ளுதல், வாசிப்பு இயக்கத்தில் இளைஞர்களைப் பங்கேற்கச் செய்தல் மனிதநேய மாட்சிமைக்கும் பண்பாட்டு மீட்டுருவாக்கத்திற்கும் வழி வகுக்கும் எனத்  தலைவர் நிறைவுரையில் கூறினார். ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சுவாதி அவர்கள் வருங்காலத்தில் வாசிப்பு இயக்கம் மேற்கொள்ள விருக்கும் பணிகளை விளக்கி நன்றியுரையாற்றினார்.
புத்தகங்களின் புனிதப் பணிகள் பற்றித்  தலைமையேற்ற பாவலர் பொன்.க அவர்கள் கீழ்க் கண்ட பாடலை இசையுடன் பாடி பங்கேற்றோரை மகிழ்வித்தார்.


புத்தகம்  நம்முடன்   பேசத்   துடிக்குது  பேசிப்   பார்ப்போமா?
புத்தகப்  பேச்சினில்  வித்தகம் ஆயிரம் விரும்பிக்  கேட்போமா?
மௌன  மொழியினாலே...நம் மௌனம்  களைத்து விடுமே
மனதுக்குள் புதுப்புது  மாற்றங்கள்  தந்திடும்  விந்தைகள்  அறிவோமா?


நேற்றைய  மாந்தரின்  மாட்சியை  வீழ்ச்சியை  நிரல்படச்  சொல்லிடுமே
இன்றையப்  புதுமையின்  எழுச்சியை  வளர்ச்சியை  எழிலாய்க் காட்டிடுமே
நாளையத்  தலைமுறை  நாடிடும்  செயலுக்கு  நம்பிக்கை  ஊட்டிடுமே
நாளொரு  நிகழ்வையும்  பொழுதொரு  நடப்பையும்  நலிவின்றிப்  பேசிடுமே.

அறிவியல்  வளர்ச்சியை  அணுயுகப் புரட்சியை ஆய்வுடன்  சொல்லிவரும்
அருங்கலை மிளிர்ச்சியை அழகியல் மலர்ச்சியை அமுதமாய்க் கொட்டித்தரும்
வானியல்  மருத்துவப்  பொறியியல்  வேளாண்  கருத்துகள்  ஊட்டிவிடும் 
வாழ்வியல் சுவைகளை  வகைவகை  இலக்கிய  ஏடுகள்  அள்ளித் தரும்

சிறியவர்  பெரியவர்  மாற்றுத்  திறனாளிக்  கேற்றதாய்ச்  சேதிசொல்லும்
சிந்திக்கச் சிரித்திடச் சீராய்வு மேற்கொள்வோர் தேவைக்கு வழிகள் சொல்லும்
எண்ணற்ற  அறிஞர்கள்  இவைவழி  காட்டலால்  ஏற்றங்கள்  பெற்றனரே
இன்னும்  தயக்கமா?  தொடங்குங்கள்   புத்தக  வாசிப்பை  இப்பொழுதே.

Saturday, November 19, 2011

நூலக வார விழா

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
19.11.2011 புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட வாசகர் வட்டமும் மைய நூலகமும் இணைந்து நடத்திய 44 ஆவது ” தேசிய நூலக வார விழா” வில் பாவலர் பொன்.க வழங்கிய இசைப்பாடல்.

Cu; eLtpy; Xu; Cw;Wf; fpzW
,irg;ghly; : ghtyu; nghd;.fUg;igah GJf;Nfhl;il.
CUf;nfhU  E}yfnkd;gJ  Cw;WjUk;  fpzW mjpy;
CwptUk;  mwpTj;Njidg;   gUfpNa   caU
ghu;KOJk; kdpjtsj;ijg;  ngUf;fpLk; cwT ce;jd;
Nrhu;itePf;Fk; Gj;jfcyfk; gbj;JNk  czU.   CUf;nfhU

ms;sms;sf;  Fiwahj   mwpTvDk;  mKjk;jUk;
fs;skpyh  ez;gidg;Nghy; ifNfhu;f;Fk; cwTjUk;
vy;iyapyhg; GJcyfpy;  ,Oj;Jek;ik  cyttpLk;
njhy;iynayhk; fle;jxU njhiyNehf;fg; ghu;itjUk;
khDlg; gz;gpidg; Ngzptsu;j;jpLk; E}ypidj; Njbr; nry;Nthk;
Nkhd epiyapdpy; Qhdk;tpisj;jpLk; E}yfk; ehbr; nry;Nthk;
                                        --CUf;;nfhU
md;Gepyk;  tsg;gLNk   mwg;gapu;  tsu;j;jpLNk
gz;Gf;fjpu; tpisj;Jcau; kdpjj;ij kyu;j;jpLNk
ed;WjPJ  gFj;Jzu;j;jp  ek;ikekf; Fzu;j;jpLNk
vd;Wkd  kpsikahf;f  Vw;wey;   mwpTg;ngl;lfNk
cyfj;J mwpQu;fs; xd;whff; $bLk; xg;gw;w Nfhl;lkJ
eyKw;W ehk;tho cuKw;wf; fdpjUk; gad;kuj; Njhl;lkJ
                                        --CUf;nfhU
Kd;Ndhupd;  vz;zq;fspy;  %o;fpKj;Jf;  Fspg;Nghkh?
gd;dhl;Lg;   gy;JiwE}y;  gUfpr;Rit   fspg;Nghkh?
ek;ehl;L   vopy;gilg;gppy;  eide;Jkdk; Fjpg;Nghkh?
nrk;khe;Jr; rPu;ikngw Cnuq;Fk; E}y;fs; tpijg;Nghkh?
Kiwnra;Ak; E}y;fw;W rpiwfis %lyhk; thUq;fs; Njhou;fNs
,iwf;fpd;w Cw;Wjhd; Ruf;FNk vd;gjhy; Njhz;Lf Cw;Wfis - CUf;nfhU