Friday, September 16, 2011

சொன்னாரே பெரியார்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 133 ஆவது பிறந்த நாளில் அவருடைய பகுத்தறிவுச் சிந்தனைகளில் சில துளிகள்  புதுக்கோட்டை பாவலர் பொன்.கருப்பையா அவர்களின் பாடல் வரிகளாக...

சொன்னாரே   கேட்டீயாப்பா - அய்யா
சொன்னாரே   கேட்டீயாப்பா
பகுத்தறிவே    உன்னை  உயர்த்தும்  படிகள்ன்னு
சொன்னாரே  கேட்டீயாப்பா                                                      -- சொன்னாரே

ஒழைச்சுப்      பொழைப்பவந்தான்   ஒசத்தி - மத்தவன்
ஒழைப்பிலே வாழ்பவனுக்  கிகழ்ச்சி
பிறப்பிலே    ஏதுங்கடா        பேதம் - நம்மைப்
பிரிக்கத்தான் செஞ்சுவச்சான்  வேதம்வேதமுன்னு         - சொன்னாரே

சாமிவேத சகுனம் மூடமந்திரம் - நம்மைப் 
பயமுறுத்திப் பணியவச்ச தந்திரம்
பஞ்சாங்கச் சாத்திரங்கள் மோசம் - காசு
சம்பாதிக்க அவன்போட்ட வேசம் வேசமுன்னு                   - சொன்னாரே

புளுகுமூட்டைப்  புராணங்களை  ஒதுக்கு - தமிழன் 
பண்பாட்டுக்         கதுரொம்ப          இழுக்கு
நாகரிகச்சிந்        தனையைப்           பெருக்கு- பழைய
காட்டுமிராண்டித்   தனம்               எதுக்கு எதுக்குன்னு         - சொன்னாரே

அறிவென்னும்    ஆயுதத்தைத்     தீட்டு - உந்தன் 
அறியாமைப்       பேயைஅதால்     ஓட்டு
மூடநம்                 பிக்கைகள்        ஒழிந்தால் -பல
மோசடிப்  பேர்வழிகள்   வேசம்  களையுமுன்னு                   - சொன்னாரே

சாதிமறுப்புத்   திருமணத்தை     நடத்து -நாட்டில்
சமநீதி              படருமதைத்            தொடர்ந்து
தேவையில்லாச்  சடங்குகளை  நிறுத்து - உன்னைச் 
சூத்திரன்னு       சொன்னவனைத்   துரத்து துரத்துன்னு        - சொன்னாரே

அறிவுக்குத்       தலைதாழ்த்தி        வணங்கு - உனக்கு
ஆற்றல்தரும்  செயலுக்கு நீ           இணங்கு
ஆகமத்தின்        புரட்டுகளை         ஒதுக்கு - இல்லா
ஆண்டவன்      வழிபாட்டை           நிறுத்து நிறுத்துன்னு        - சொன்னாரே







No comments:

Post a Comment