Wednesday, December 14, 2011

நேரு யுவ கேந்திரா - கலைவிழா

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                14.12.2011 அன்று புதுக்கோட்டையில் இந்திய அரசு நேரு யுவ கேந்திரா புதுக்கோட்டைக் கிளையும் புதுக்கோட்டை சுழற்கழகமும் இணைந்து  இளையோர்க்கான மாவட்ட அளவிலான கலை விழாவினைச் சிறப்பாக நடத்தினர்.
                
               மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் இளையோர் மன்றத் தினர் முற்பகல் நடைபெற்ற  கலைப் போட்டிகளில் கலந்து கொண்டனர். நாட்டுப் புறப் பாடல்கள். கிராமிய தனி நடனம்,  கரகம், பரதநாட்டியம், குழு நடனங்கள் ஆகியவற்றில் போட்டிகள் நடைபெற்றன.

              பாவலர் பொன்.கருப்பையா, கவிஞர் ஆர்.நீலா ஆகியோர் போட்டி நடுவர்களாக இருந்து மாநிலப் போட்டிக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்தனர்.

              பிற்பகல்  வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் கலை நிறைவு விழா, புதுக்கோட்டை சுழற்கழகத் தலைவர் ரொட்டேரியன் என்.கனகராசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

              திரு சேது.கார்த்திகேயன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் திரு லெ.பிரபாகரன் மற்றும்  நகர்மன்ற உறுப்பினர் சையது இபுறாகிம் ஆகியோர் முன்னிலையேற்றனர்.

             நேரு யுவ கேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. க.சதாசிவம் அவர்கள் விழாவின் நோக்கவுரையாற்றினார்.  புதுக்கோட்டை மகாராணி சுழற்கழகத் தலைவி திருமதி ராணி கனகராசன், மேனாள் தலைவர் திரு செந்தி, ஏஞ்சல் வேர்ல்டு அறக்கட்டளை நிருவாக இயக்குநர்
திரு . ஜே.ஆரோக்கியராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். போட்டிகளின் பங்கேற்றவர், போட்டிகளின் சிறப்புப் பற்றி பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் உரையாற்றினார்.

             வெற்றியாளர்களை கவிஞர் ஜீவி அவர்கள் பாராட்டிப்பேசிப் பரிசுகளை வழங்கினார்.. நிறைவாக சுழற்கழகப்  பொருளாளர் திரு.ஆரோக்கியசாமி அவர்கள் நன்றி கூற நாட்டுப் பண்ணுடன் விழா முடிவுற்றது.

பாரதியார்-130 பிறந்தநாள் விழா - நாடகம்

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
        
                      11.12.2011 அன்று, புதுக்கோட்டை ஐசுவர்யா கூட்ட அரங்கில், புதுக்கோட்டை கவிராசன் இலக்கியக் கழகம் மற்றும் உலகத் திருக்குறள் பேரவை இணைந்து நடத்திய ”கவிராசன் பாரதி விழா” சிறப்பாக நடைபெற்றது.
            
                   கிரவுன் சிட்டி சுழற்கழகத் தலைவர் ரொட்டேரியன் மு.அப்துல் சலாம் அவர்கள் தலைமையேற்க முனைவர் மு.பழனியப்பன் அவர்கள் வரவேற்புரை யாற்றினார்.
                       
                         உலகத் திருக்குறள் பேரவையின் பொதுச்செயலாளர் புலவர் தி.சு.மலையப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
                       
                        இயற்றமிழ் பற்றி இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள்  உரைவீச்சு நிகழ்த்தினார்.  
                      
                      இளந்திரு கி.அரிமோகன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. 
                     
                        நாடகத் தமிழ் பற்றி பாவலர் பொன்.கருப்பையா அவர்களின் முன்னுரையோடு, அவர் எழுதி இயக்கிய, புதுகை மணிச்சுடர் கலைக்கூடம் சார்பான ” இவர்களும் இன்றும்” என்னும் நாடகம் சிறப்பாக நடைபெற்றது. 

                     நாடகத்தில் தமிழின் சிறப்பு, தாய்மொழி வழிக்கல்வி, பெண் சமத்துவம், பொதுவுடைமை, சாதி மதப் பிணக்குகள், அந்நிய முதலீடு, நதிநீர்ப் பிரச்சனை, நாட்டு ஒருமைப் பாடு, மனிதநேயம்  ஆகியவற்றின்  இன்றைய நிலைப் பாடும் அவற்றிற்கான தீர்வுகள் பற்றிய அன்றையச் சான்றோர் களாகிய திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் சிந்தனைகளும்  நாடக உரையாடல்கள் வாயிலாக நடித்துக் காட்டப் பட்டது.
                    
                   இந்நாடகத்தில்  திருவள்ளுவராக புலவர் மு.பாலசுப்பிரமணியன் அவர்களும், பாரதியாராக புலவர் மகா.சுந்தர் அவர்களும், பாரதிதாசனாராக தமிழாசிரியர் வள்ளியப்பன் அவர்களும்,  கூத்தனாக காப்பாளர் சிதம்பர ஈசுவரன் அவர்களும், நல்லமுத்துவாக உடற்கல்வி ஆசிரியர் இராச.ஜெய்சங்கர் அவர்களும் நடித்தனர். தலைமை ஆசிரியர் க.மதிவாணன் கதைமாந்தர்களை ஒப்பனையில் உருவாக்கியிருந்தார். 
                   
                  இசைப் பாடல்களோடும் நகைச்சுவையோடும் நடைபெற்ற இந்நாடகத்திற்கு இளந்திரு கி.அரிமோகன் இசையமைத்திருந்தார்.  
                
                 விழாவின் சிறப்பாக மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்களுக்கு ”மகாகவி பாரதியார் விருது” வழங்கிச் சிறப்பிக்கப் பட்டது. 
                  
                  சிறப்பு விருந்தினர்களை உலகத் திருக்குறள் பேரவையின் மாவட்டத் தலைவர் திரு சண்முக பழனியப்பன் அவர்கள் அறிமுகம்  செய்து வைத்தார். 
                   
                  விருது பெற்ற கவிச்சுடர் கவிதைப் பித்தன் அவர்களை கவிராசன்  இலக்கியக் கழகத் தலைவர் கவிஞர் நா.கண்ணன் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.
                
                    முன்னாள் அமைச்சர் உபத்துல்லா உள்ளிட்ட புதுக்கோட்டையின் இலக்கிய அமைப்பினரும் பொதுமக்களும் அரங்கு நிறைத்து விழாவினைச் சுவைத்தனர்.
               
                  பாடல் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
              
                   விழாவினை ஒருங்கிணைத்து நடத்திய கவி .முருகபாரதி அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

பேரிடர் மேலாண்மை

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                       01.12.2011 புதுக்கோட்டை அசோக்நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சியளிக்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர் திருமதி இலாகிஜான் அவர்கள் வரவேற்றார். நகர்மன்ற உறுப்பினர்திரு க.பாண்டியன் தலைமையேற்றார். பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு சபாரெத்தினம் அவர்கள் முன்னிலையேற்றார்.
                     
                    இயற்கைச் சீற்றங்கள் எதனால் ஏற்படுகின்றன? அவற்றைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் மேற்கொள்ள வேண்டிய இன்றியமையாப் பணிகள் என்னென்ன? என்பதைப் பற்றி மாணவர் மனங்கொள்ளத் தக்க வகையில்  கருத்தாளர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர்  பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் விளக்கினார்.
                    
                    இயற்கைச் சீற்றங்களிலோ, திடீர் நோய்களினாலோ, எதிர்பாராத விபத்துகளினாலோ பாதிக்கப் பட்டவர்களை எவ்வாறு மீட்க வேண்டும், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும்  என்பனவற்றைச் செயல் விளக்கங்களோடு பயிற்சியளித்தார். 
             குறிப்பாக நீரில் மூழ்கியவரை நீளக் கயிறு கொண்டு மீட்டல், தீ, புகை சூழ்ந்த மாடிப் பகுதியில் சிக்கி மயக்கமுற்றவரை தவழ்ந்து மீட்டல், தீயணைப்பவர் தூக்கு மூலம் மீட்டுக் கொணர்தல், சாலை விபத்து, கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டல், மயக்கமுற்றவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வருதல் , செயற்கைச் சுவாசமளித்தல், நெஞ்சழுத்த முறையில் இதயத் துடிப்பை மீளச் செய்தல், இரத்த ஒழுக்கை நிறுத்தும் வழி முறைகள், எலும்பு முறிவுகளுக்கு முக்கோணக் கட்டுத் துணி கொண்டு கட்டுகள் போடுதல், காயம் பட்டவரை ஒருவராக, இருவராக, நால்வர் சேர்ந்து தூக்கிச் செல்லுதல்,உருவாக்கத்தூக்கிகள்தயாரித்தல்ஆகியவற்றில்பயிற்சிஅளிக்கப்பட்டது.                                                                                                                 
                     முதலுதவியில் பயன் படும் முடிச்சுகள் போடுவது பற்றிய பயிற்சியும் அளிக்கப் பட்டது, 
மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பயிற்சி பெற்றனர். நிறைவாக பள்ளிப் பட்டதாரி ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க நகரச் செயலாளருமான திரு பழனிச்சாமி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

Wednesday, November 30, 2011

நேரு யுவ கேந்திரா- முப்பெரும் விழா

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
            29.11.2011 அன்று, புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரிக் கலை அரங்கில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி ப.மகேஸ்வரி அவர்கள் தலைமையில், நேரு இளையோர் மையத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. மாவட்ட இளையோர் எழுச்சிக் கூட்டம், மாவட்ட அளவிலான சிறந்த இளையோர்க்கு விருது வழங்கும் விழா, இளையோர் மன்றங்களுக்கு விளையாட்டுப் பொருள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நிரல்பட நிகழ்ந்தன. திருமதி இராஜேஸ்வரி வரவேற்புரையாற்றினார். மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் திரு க.சதாசிவம் அவர்கள் விழாவின் நோக்க உரையாற்றினார். புத்தா தற்காப்புக்கலை இளையோர் மன்ற சேது கார்த்தி கேயன், இமயமலையேற்றப் பயிற்சி பெற்ற செல்வி கண்மணி ஆகியோர்க்கு சிறந்த இளையோர்க்கான விருதுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
        தொடர்ந்து ஒரு இலட்ச ரூபாய் மதிப்பிலான விளையாட்டுப் பொருள்களை இளையோர் மன்றங்களுக்கு வழங்கி ஆட்சியர் தலைமையுரையாற்றினார். அவர் தனது உரையில் இளைஞர்கள் குறிக்கோளோடும் தன்னம்பிக்கை யோடும் செயல்பட்டால் சாதனைகள் படைத்து தானும் உயர்ந்து நாட்டையும் உயர்த்தலாம் எனக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.முத்துக்குமரன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திரு வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான், மாமன்னர் கல்லூரி முதல்வர் திரு எஸ்.கார்த்திகேயன், திரு தளபதி மாணிக்கம், மாமன்னர் கல்லூரித் தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் திரு.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பிற்பகல் நடைபெற்ற கருத்தரங்கில் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் ”நாட்டுப் புறக் கலைகாட்டும் இளையோர் பண்பாடு” என்னும் தலைப்பில் நாட்டுப்புறப் பாடல்களோடு இன்றைய இளைஞர்களின் நோக்கும் போக்கும் சிறக்க உரையாற்றினார். ஒருமைப்பாடு, பயங்கரவாதத்திற்கு எதிரான அறவழி, சமூக மேம்பாட்டில் இளையோர் பங்கு, வரதட்சணை மறுப்பு,  சாதிமத பேதமற்ற சமுதாய மலர்ச்சி ஆகிய கருத்துகள் கொண்ட பாடல்களால் இளையோர் மனதில் எழுச்சியுறச் செய்தார். நிறைவாக சேது கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Tuesday, November 29, 2011

சமூக நலத்துறை முதியோர் நாள் விழா

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
29.11.2011 அன்று  காலை 10.30 மணிக்கு புதுக்கோட்டை காவலர் மன்றத்தில், புதுக்கோட்டை சமூக நலத்துறையின் சார்பாக முதியோர் நாள் விழா கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி ப.மகேஸ்வரி அவர்கள் தலைமையேற்றார். மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி பெ.விஜயராணி அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி க.கௌசல்யா, சமூகசேவகர் புலவர் பொன்.கருப்பையா, கண்ணப்ப நாயனார் கண்தான இயக்கத் தலைவர் திரு.சி.கோவிந்தராசன், மாவட்ட நுகர்வோர் குழு பொதுச் செயலாளர் திரு சு.தனவேலு,  புலவர் மா.நாகூர், ரீகோ தொண்டு நிறுவன அமைப்பாளர் திருமதி பிரான்சிஸ் லில்லி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். குடும்ப வன்முறை பாதுகாப்பு அலுவலர் திருமதி ஆர்.சுப்புலெட்சுமி நன்றியுரையாற்றினார்.

                 தலைமையுரையில் மாவட்ட ஆட்சியர் முதியோர்  முதுமையை எண்ணிக் கவலைப் படாமல், தன்னம்பிக்கையுடனும். மகிழ்சியுடனும் இருக்க வேண்டும் எனவும் தங்களுக்குள்ள பிரச்சனைகளுக்கு மாவட்ட சமூக நலத்துறையினை  அனுகித் தீர்வுகாண வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.                              சமூக சேவகர் புலவர் பொன்.கருப்பையா அவர்கள் தனது உரையில் முதுமை சாபமல்ல அது ஒரு வரம், முதிர்ச்சியான அனுபவங்களே எதிர்கால சமூகத்தினரை வழி நடத்தும் முதியோரின் கூட்டுக்குடும்ப நெறியால் ஏற்படும் நல் விளைவுகளையும், முதியோரைப் புறக்கணிப்போர் படும் இன்னல் களையும் விளக்கி, மாண்புகளை மலர்த்திய மூத்தோர்களைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நிறைவாக முதியோரை வாழ்த்திக் கீழ்க்காணும் பாடலை இசையுடன் பாடி அனைவரையும் மகிழச் செய்தார். விழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர்களும் திரளான முதியோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பாடல்.
தத்துவமாய்   விளங்கும்   முதுமக்களே - என்றும்                                                                                            முத்தாய்நல்  மொழிகூறி  வாழ்த்துவமே                             --தத்துவமாய்

சிந்தையில்   ஊறியநல்  எண்ணங்களால் - அருஞ்                                                 
 செயல்பல   ஆற்றினர்   வண்ணங்களாய்                                                                       
முந்தைய    அனுபவத்   தொன்மங்களால் - எங்கும்                                                
 முகிழ்த்தன  பயன்விளை  நன்மைகளே                           -- தத்துவமாய்

வீரத்தில்    உயர்ந்தோங்கும்   சூரர்களாய் - நெஞ்ச                                                   
 ஈரத்தில     சுமைதாங்கித்        தீரர்களாய்                                                                  
சாரத்தால்  நிறைத்திட்டார்  சாதனைகள் - உப                                                            
காரத்தால்  ஓங்குமவர்   போதனைகள்                               --தத்துவமாய்

வாழ்க்கையில்  குறுக்கிட்ட  தடைகடந்தும் - பெரும்                                             
வறுமையை    வென்றுமே     வளமைகண்டார்                                                                  
தாழ்விலும்      நிறைவென்னும்  உயர்வுகொண்டார் - புதுத்                           
தலைமுறை   மேம்பட     வழிகள்தந்தார்                           --தத்துவமாய்

புல்நுனிப்       பனிபோலே    நிலையாமை - அதைப்                                                 
புரியாதோர்  சினம்கொள்வார்  அறியாமை                                                          
வில்லினில்  கணையேற்றும்  வெகுளாமை - நீக்கிச்                                             
சொல்லுக்குள்  சுவைசேர்ப்பார்  பெரும்பான்மை          --தத்துவமாய் 

சிற்பமாய்ச்  செதுக்கிய    சொந்தமெல்லாம் -தம்மை                                                    
அற்பமாய்   ஒதுக்கியும்   குமுறல்கொள்ளார்                                                        
அற்புதக்     கரங்களினால்  அரவணைப்போம் - அவர்                                                 
 பொற்பதம்  காட்டிய  வழிநடப்போம்                                    --தத்துவமாய்

Monday, November 21, 2011

வாசிப்பு இயக்கம்

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                          புதுக்கோட்டை பெரியார் நகரில் 20.11.2011 மாலை பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் தலைமையில் ” வாசிப்பு இயக்க”த் திங்கள் கூட்டம் நடைபெற்றது. இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சுவாதி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கவிஞர் கீதா அவர்கள் ” என் பெயர் மரியாட்டு ” என்னும் நூலினை வாசித்து, புரட்சிக் காரர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான கனட நாட்டுச் சிறுமி தன் மன உறுதியினால் ஒரு சமூக மாற்றப் படைப்பாளியாக உயர்ந்த கதையினை உரிய உணர்ச்சிகளோடு அவைக்கு வழங்கினார்.
புலவர் மகா சுந்தர் அவர்கள் வாசிப்பு இயக்கம் வலுப்பெறும் வழிமுறை களையும் வளர்ச்சிப் படிநிலைக் கூறுகளையும் விளக்கினார். இரா.சம்பத்,  புலவர் மு.பா, கவிஞர் கஸ்தூரிநாதன், எய்ம்ஸ் கந்தசாமி, பீர்முகமது, சுரேசு,முகேசு, முத்துச்சாமி,திரைப்பட இயக்குநர் முரளி அப்பாஸ், கவிஞர் தங்கம் மூர்த்தி ஆகியோர் வாசிப்பு இயக்கம் வலுப்பெற அரிய ஆலோசனை களை வழங்கினர். கலந்துரையாடலின் தொகுப்பாக, வாசிப்பு, இளைய தலைமுறைக்கு வழிகாட்டத் தக்கதாக அமைய, சமூக மேம்பாட்டுப் படைப்பாளிகளின் நூல்களைத் திங்கள் தோறும் ஒரு இலக்கிய ஆர்வலர் ஆய்ந்து, அப்படைப்பு பற்றிய கருத்தினை திங்கள் கூட்டத்தில் வழங்கி பங்கேற்போர்களின் கருத்துப் பகிர்வு மேற்கொள்ளுதல், வாசிப்பு இயக்கத்தில் இளைஞர்களைப் பங்கேற்கச் செய்தல் மனிதநேய மாட்சிமைக்கும் பண்பாட்டு மீட்டுருவாக்கத்திற்கும் வழி வகுக்கும் எனத்  தலைவர் நிறைவுரையில் கூறினார். ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சுவாதி அவர்கள் வருங்காலத்தில் வாசிப்பு இயக்கம் மேற்கொள்ள விருக்கும் பணிகளை விளக்கி நன்றியுரையாற்றினார்.
புத்தகங்களின் புனிதப் பணிகள் பற்றித்  தலைமையேற்ற பாவலர் பொன்.க அவர்கள் கீழ்க் கண்ட பாடலை இசையுடன் பாடி பங்கேற்றோரை மகிழ்வித்தார்.


புத்தகம்  நம்முடன்   பேசத்   துடிக்குது  பேசிப்   பார்ப்போமா?
புத்தகப்  பேச்சினில்  வித்தகம் ஆயிரம் விரும்பிக்  கேட்போமா?
மௌன  மொழியினாலே...நம் மௌனம்  களைத்து விடுமே
மனதுக்குள் புதுப்புது  மாற்றங்கள்  தந்திடும்  விந்தைகள்  அறிவோமா?


நேற்றைய  மாந்தரின்  மாட்சியை  வீழ்ச்சியை  நிரல்படச்  சொல்லிடுமே
இன்றையப்  புதுமையின்  எழுச்சியை  வளர்ச்சியை  எழிலாய்க் காட்டிடுமே
நாளையத்  தலைமுறை  நாடிடும்  செயலுக்கு  நம்பிக்கை  ஊட்டிடுமே
நாளொரு  நிகழ்வையும்  பொழுதொரு  நடப்பையும்  நலிவின்றிப்  பேசிடுமே.

அறிவியல்  வளர்ச்சியை  அணுயுகப் புரட்சியை ஆய்வுடன்  சொல்லிவரும்
அருங்கலை மிளிர்ச்சியை அழகியல் மலர்ச்சியை அமுதமாய்க் கொட்டித்தரும்
வானியல்  மருத்துவப்  பொறியியல்  வேளாண்  கருத்துகள்  ஊட்டிவிடும் 
வாழ்வியல் சுவைகளை  வகைவகை  இலக்கிய  ஏடுகள்  அள்ளித் தரும்

சிறியவர்  பெரியவர்  மாற்றுத்  திறனாளிக்  கேற்றதாய்ச்  சேதிசொல்லும்
சிந்திக்கச் சிரித்திடச் சீராய்வு மேற்கொள்வோர் தேவைக்கு வழிகள் சொல்லும்
எண்ணற்ற  அறிஞர்கள்  இவைவழி  காட்டலால்  ஏற்றங்கள்  பெற்றனரே
இன்னும்  தயக்கமா?  தொடங்குங்கள்   புத்தக  வாசிப்பை  இப்பொழுதே.

Saturday, November 19, 2011

நூலக வார விழா

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
19.11.2011 புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட வாசகர் வட்டமும் மைய நூலகமும் இணைந்து நடத்திய 44 ஆவது ” தேசிய நூலக வார விழா” வில் பாவலர் பொன்.க வழங்கிய இசைப்பாடல்.

Cu; eLtpy; Xu; Cw;Wf; fpzW
,irg;ghly; : ghtyu; nghd;.fUg;igah GJf;Nfhl;il.
CUf;nfhU  E}yfnkd;gJ  Cw;WjUk;  fpzW mjpy;
CwptUk;  mwpTj;Njidg;   gUfpNa   caU
ghu;KOJk; kdpjtsj;ijg;  ngUf;fpLk; cwT ce;jd;
Nrhu;itePf;Fk; Gj;jfcyfk; gbj;JNk  czU.   CUf;nfhU

ms;sms;sf;  Fiwahj   mwpTvDk;  mKjk;jUk;
fs;skpyh  ez;gidg;Nghy; ifNfhu;f;Fk; cwTjUk;
vy;iyapyhg; GJcyfpy;  ,Oj;Jek;ik  cyttpLk;
njhy;iynayhk; fle;jxU njhiyNehf;fg; ghu;itjUk;
khDlg; gz;gpidg; Ngzptsu;j;jpLk; E}ypidj; Njbr; nry;Nthk;
Nkhd epiyapdpy; Qhdk;tpisj;jpLk; E}yfk; ehbr; nry;Nthk;
                                        --CUf;;nfhU
md;Gepyk;  tsg;gLNk   mwg;gapu;  tsu;j;jpLNk
gz;Gf;fjpu; tpisj;Jcau; kdpjj;ij kyu;j;jpLNk
ed;WjPJ  gFj;Jzu;j;jp  ek;ikekf; Fzu;j;jpLNk
vd;Wkd  kpsikahf;f  Vw;wey;   mwpTg;ngl;lfNk
cyfj;J mwpQu;fs; xd;whff; $bLk; xg;gw;w Nfhl;lkJ
eyKw;W ehk;tho cuKw;wf; fdpjUk; gad;kuj; Njhl;lkJ
                                        --CUf;nfhU
Kd;Ndhupd;  vz;zq;fspy;  %o;fpKj;Jf;  Fspg;Nghkh?
gd;dhl;Lg;   gy;JiwE}y;  gUfpr;Rit   fspg;Nghkh?
ek;ehl;L   vopy;gilg;gppy;  eide;Jkdk; Fjpg;Nghkh?
nrk;khe;Jr; rPu;ikngw Cnuq;Fk; E}y;fs; tpijg;Nghkh?
Kiwnra;Ak; E}y;fw;W rpiwfis %lyhk; thUq;fs; Njhou;fNs
,iwf;fpd;w Cw;Wjhd; Ruf;FNk vd;gjhy; Njhz;Lf Cw;Wfis - CUf;nfhU

Saturday, October 22, 2011

துளிர் இளம் படைப்பாளிகள் பயிற்சிப் பட்டறை

          22.10.2011 அன்று  தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டக் கிளை துளிர்  சிறுவர் அறிவியல் திங்கள் இதழ் சிறுவர் படைப்பாளிகளுக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறையை தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகக் கூட்ட அரங்கில் நடத்தியது.                                                                                                                    த.நா.அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் திரு லெ.பிரபாகரன் அவர்கள் தலைமையிலும் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, தா.சிவராமகிருஷ்ணன்.  நகரப் பொருளாளர் பழனிமுத்து ஆகியோர் முன்னிலையிலும் பயிற்சிப் பட்டறை தொடங்கியது.நகரச் செயலாளர் பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் எஸ.டி.பாலகிருஷ்ணன் அவர்கள் பட்டறைப் பயிற்சியினைத் தொடங்கி வைத்து ”துளிர் இதழ்” பற்றிய அறிமுக உரையாற்றினார். புதுக்கோட்டை நகர எல்லைக்குட்பட்ட பல்வேறு பள்ளிகளில் தேர்ந்து அனுப்பப் பட்ட 32 மாணவர்கள் படைப்புப் பயிற்சி மேற்கொண்டனர்.                                            
              த.மு.எ.க.ச மாநிலச் செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா.முத்துநிலவன் கதைகள் படித்தலும் படைத்தலும் பற்றிய கருத்துகளை நடித்துக் காட்டி விளக்கினார். கருத்தாளர் எழுத்தாளர் இராசி.பன்னீர் செல்வம் கவிதை புனையும் பயிற்சியளித்தார். பாவலர் பொன்.கருப்பையா பாடல். கட்டுரை எழுதவும், எளிய அறிவியல் ஆய்வுகள் செய்யவும், ஓவியம் வரையவும் பயிற்சியளித்தார். 
            விளையாட்டு மற்றும் பாடல்களுடன் சோர்வில்லாது இளம் படைப்பாளிகள் ஆர்வமுடன் பல்வேறு படைப்புத் திறன் பயிற்சியினைப் பெற்றனர். அவர்கள் படைத்த கவிதைகள், கட்டுரைகள், ஓவியங்கள், கதைகள், படைத்தவர்களின் ஒளிப்படம் மற்றும் முகவரியோடு துளிர் இதழில் வெளியிட மாநிலத் துணைத் தலைவர் மாநில மையத்திற்கு உடன் அனுப்பிவைத்தார். 
              பட்டறையில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் துளிர் மற்றும் அறிவியல் வெளியீடு நூல்கள் அளிக்கப்பட்டது. நிறைவு நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் மணவாளன், மாவட்டச் செயலாளர் செயபாலன் ஆகியோர் படைப்பாளிகளைப் பாராட்டிப் பேசினர். த.நா.அறிவியல் இயக்க மாவட்டப் பொருளாளர் வீரமுத்து  அனைவருக்கும் நன்றி கூற பிரியா மனங்களுடன் இளம் படைப்பாளிகள் பிரிந்து சென்றனர்.

Wednesday, October 12, 2011

பயிலரங்கம்

            12.10.2011 அன்று புதுக்கோட்டை பெருமாநாடு சுதர்சன் கல்வியியல் கல்லூரியில் எளிய அறிவியல் ஆய்வுகள் பற்றிய ஒருநாள் பயிலரங்கம் சிறப்பாக நடை பெற்றது. கல்வியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ரெங்கராசன் அவர்கள் தலைமையேற்றார்.  துணை முதல்வர் திரு இராசா சுவாமிநாதன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் புலவர் பொன்.கருப்பையா அவர்கள் கல்வியியல் கல்லூரி ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு ” கற்பித்தலில் பயன் தரும் எளிய அறிவியல் ஆய்வுகள்” என்னும் தலைப்பில்  செயல் முறை களுடன்  பயிற்சியளித்தார்.                                                                                               
               நடுநிலை, மேல்நிலை பயிலும் மாணவர்களுக்கு பயிற்றுவித்தலில்  செலவில்லாத, குறைந்த செலவிலான இயற்பியல், வேதியியல், உயிரியல், மின்னியல் சார்ந்த எளிய ஆய்வுகள் பல பயிற்சியில் செய்து காட்டப்பட்டன. பயிற்சி ஆசிரியர்கள் தங்களை முழுமையாக பயிற்சியில் ஈடுபடுத்திக் கொண்டு தேவையான விளக்கங்களை பயிற்றுநரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர். பயிற்சியின் விளைவு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பயிற்சி ஆசிரியர்கள் கருத்தளித்தனர்.                                                                                                   
                நிகழ்ச்சியினை பேராசிரியர் பரமேசுவரன் அவர்கள் ஒருங்கிணைத் திருந்தார்.  நிறைவாக கல்வியியல் கல்லூரியின் முதல்வர், இத்தகு பயிற்சி மாணவர்களின் கல்விப் பணிக்கு சிறந்த படிக்கட்டாக அமையும் எனக்கூறி நன்றி பாராட்டினார்.

Monday, October 10, 2011

பேரிடர் மேலாண்மை

                           புதுக்கோட்டை சத்தியமங்கலம் கீரைத் தமிழ்ச்செல்வன் கல்வி நிறுவனத்தில் 10.10.2011அன்று  பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம் நிறுவனத்தின் செயலாளர் திரு பீட்டர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் சிறப்புக் கருத்தாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
                  அவர் தனது உரையில், மனிதகுலத்தைப் பாதித்து வரும் புவிஅதிர்வு, வெள்ளப்பெருக்குகள், புயல்,காட்டுத்தீ  போன்ற இயற்கைச் சீற்றங்களினால் ஏற்படுகின்ற பாதிப்புகள், புவி வெப்பமயமாதலால் நிகழும் வளிமண்டலச் சீர்கேடுகள், ஓசோன் படலத்தின் பாதிப்பினால்  புவியில் பனிப்பாறைகள் உருகி கடல்நீர் மட்டம் உயர்வதால் உள்வாங்கப் படும் நிலப்பரப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பினால் அழிந்து வரும் பல்லுயிரிகள்  அதனால் ஏற்படும் மனித குல பாதிப்புகள் பற்றி விளக்கினார். அறிவியல் கருவிகளை அபரிமிதமாகவும் தவறாகவும் அழிவிற்காகவும் குறுக்குவழியில் பொருளீட்டப்  பயன்படுத்தும் சுயநலவாதிகளால் இயற்கை வளங்களான நிலம், நீர், காற்று மாசுபடுவதையும் மனிதகுலம் இனம் தெரியாத நோய்களில் சிக்கிச் சீரழியும் நிலையினையும் சுட்டிக்காட்டி, இயற்கையைப் பாதுகாக்க மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டிய அவசியத்தையும், தோல்,சாயத் தொழிற்சாலைக் கழிவுகள் தூய்மையாக்கத்திற்குப் பின் வெளியேற்றப் பட வேண்டியதன் அவசியத்தை யும்  வலியுறுத்தினார்.
                     இவையன்றி விழாக்காலங்களில் காற்றுமண்டலத்தைப் பாழ்படும் வேள்விகளில் பொருள்களை எரித்தல், வெடி மத்தாப்பு கொளுத்துதல், எளிதில் அழியாத மெல்லிய பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துதல, தேவையற்ற வெப்ப ஒளி உமிழ்விளக்குகளின் அலங்காரம் முதலியவற்றைத் தவிர்ப்பதன் மூலம் இயற்கைச் சீற்றங்களைத் தவிர்க்கலாம் என்பதையும் எடுத்துரைத்தார்.
             ஆக்கத்திற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட அணுவின் சக்தி அழிவுக்குப் பயன் படுத்தப் படுவதற்கான கண்டனக் கருத்தையும் பதிவு செய்தார். பசுமை இல்ல வாயுக்களால் வளிமண்டலமும் அதைச் சார்ந்து வாழும் உயிரினமும் பாதிக்கப் படாமல் இருக்க, தொழில் கூடங்களுக்கு, காற்று, கடல்நீர், சூரியஒளி (வெப்பம்)இயற்கைக் கழிவுகள் (குப்பை)முதலானவற்றின் மூலம் ஆற்றல் சக்தியினை உருவாக்கும் முயற்சிகள் மென்மேலும் பெருக வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தினார்.
                          கல்வி நிறுவனத்தில் பயிலும் கல்வியியல் ஆசிரியர்ப் பயிற்சி மாணவர்கள், செவிலியர் கல்லூரி, செவிலியர் தொழில் நுட்ப மாணவர்கள் என 300 மாணவர்களும் பேராசிரியர்களும் துறை வல்லுநர்களும் கலந்து கொண்டு, கருத்தரங்கில் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டது சிறப்பாக அமைந்தது. கல்வியில் கல்லூரி முதல்வர் வரவேற்க, துறைத் தலைவர் திரு முத்து அவர்கள் நன்றியுரை யாற்றினார்.

Friday, October 7, 2011

நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

                    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் திருவப்புர் பகுதியில் 3.10.2011 முதல் நடைபெற்று வருகிறது. அம்முகாமின் ஐந்தாம் நாள் நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டத் துணைத் தலைவர் புலவர் பொன்.கருப்பையா அவர்கள் முகமையர்க்கு ”மந்திரமா? தந்திரமா? என்னும் அறிவியல் விழி்ப்புணர்வு  நிகழ்ச்சியினை நடத்தினார்.
              அவர் தனது உரையில் அறியாமை மற்றும் மூடநம்பிக்கைகள் பாமர மக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதையும் அவற்றை நீக்க அறிவியல் சிந்தனைகளை சமுதாயத்தில் பரப்ப வேண்டிய அவசியம பற்றி வலியுறுத்தினார்

     நிகழ்ச்சியில் வெற்றுக் கையில் தங்கச் சங்கிலி, விபுதி, குங்குமம்  வர வழைத்தல், தேங்காய்க்குள் மலர் வரவழைத்தல், எலுமிச்சை பழத்துள் இரத்தம் வரவழைத்தல், தண்ணீரால் தேங்காயை தீப்பற்றி எரிய வைத்தல், தீப்பந்தங்களை உடல், நாக்கில் தேய்த்தல், கோப்பில் உள்ள படங்களை மறைய வைத்தல், சீட்டுகள் வண்ணம் மாற்றுதல், உள்ளங்கையில் சூடம் ஏற்றி அதை வாயில் போட்டு விழுங்குதல், இறுக்கியும் இறுகாத கயிறு. ஆகிய தந்திரக் காட்சிகளை அவர் செய்த போது முகமை மாணவர்களும் பகுதி மக்களும் வியந்து மகிழ்ந்தனர். அனைத்தும் மந்திரமல்ல... தந்திரமும் அறிவியலும்தான் என்பதை நிகழ்ச்சி நடத்திய பொன்.க. அவர்கள் விளக்கினார்.

        நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு கண்ணன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். நிறைவில் திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமையாசிரியர் திரு பாபு அவர்கள் நன்றியுரையாற்றினார்

Tuesday, October 4, 2011

நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

                    புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 3.10.2011 முதல் 9.10.2011 வரை அப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. முகாமின் இரண்டாம் நாள் 4.10.2011 பிற்பகல் 4.00 மணிமுதல் 7.00 மணி வரை முகமை மாணவத்  தொண்டர்களுக்கு ” பேரிடர் மேலாண்மை-இயற்கைச் சீற்றங்கள், மீட்பு மற்றும் முதலுதவி” பற்றிய பயிற்சி, தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டத் துணைத் தலைவர் மற்றும் புதுக்கோட்டை ஜே.ஆர்.சி செயற்குழு உறுப்பினர் பாவலர் பொன்.கருப்பையா அவர்களால் அளிக்கப் பட்டது.  பயிற்சியில் இயற்கையைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருமுன் காக்கும் உத்திகள், பேரிடரில் பாதிக்கப் பட்டோரை மீட்டல், முதலுதவி அளித்தல் பற்றிய செயல் விளக்கங்கள் செய்து காட்டப்பட்டன. மூர்ச்சையுற்றோரை சுய நினைவுக்குத் திருப்புதல், செயற்கைச் சுவாசமளித்தல், காயம்பட்டோரின் இரத்த ஒழுக்கை நிறுத்தும் முறைகள், எலும்பு முறிவுகளுக்குக் கட்டுப் போடுதல், நீரில் மூழ்கியோரை மீட்டலும் முதலுவியும், தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டலும் முதலுதவியும், பாதிக்கப் பட்டோரைத் தூக்கிச் செல்லும் முறைகள், அவசியமான கட்டுகளும் முடிச்சுகளும் பற்றிய செயல்முறைகள் முகாம் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடனும் ஈடுபாட்டுடனும்  இருந்தது பாராட்டத் தக்கது.
                முகாமின் திட்ட அலுவலர் திரு செல்வக்குமார் அவர்கள் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்திருந்தார்.

Friday, September 23, 2011

உயிரி உரங்கள்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தேசிய அறிவியல் தொழில்நுட்ப மன்றம் ஆகியவற்றின் பங்களிப்போடு, புதுக்கோட்டை வெங்கடேசுவரா பல்தொழில் நுட்பப் பயில் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை மனிதவளம் மற்றும் இயற்கைவள மேம்பாட்டுச் சேவை அறக்கட்டளை ஆகியவை இணைந்து, புதுக்கோட்டையில் 22,23-9-2011 ஆகிய இரு நாள்கள் மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை பரப்பும் கருத்தரங்கு நடைபெற்றது. 22.09.2011 முதல் நாள் புதுக்கோட்டை வெங்கடேசுவரா பல்தொழில் நுட்பப் பயில் கல்லூரியில் ”மாணவர்களிடையே உயிர் உரங்கள்” பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கம் கல்லூரி அறங்காவலர் திரு ஆர்.ஏ.குமாரசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. குழந்தைகள் நல மருத்துவர் இரா.சுந்தர், தாளாளர் பி.கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹேண்ட்ஸ் தொண்டு நிறுவன நிருவாக இயக்குநர் திரு.மு.சரவணன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கேண்டில் தொண்டு நிறுவன அறங்காவலர் திரு.எம்.பி.பழனிச்சாமி, ரிவார்ட்ஸ் நிறுவனர் திரு ஏ.பாஸ்கர், இயற்கை விவசாயி திரு ஜி.எஸ்.தனபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உயிர் உரங்களின் தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி வம்பன் கிரிஸ் விஞ்ஞான் கேந்திர பேராசிரியர் முனைவர் வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கருத்துரையாற்றினார். கருத்தரங்கில் ” வேதி உரங்களும் வேதனைகளும்” என்ற தலைப்பில் மரகதவள்ளி அறக்கட்டளையின் நிறுவுனர் புலவர் பொன்.கருப்பையா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் பண்டை வேளாண் உற்பத்தியும் அன்றைய மக்களின் நல வாழ்வும், இன்றைய நவீன வேளாண் இடு உரங்கள் எவ்வாறு மண்,நீர்.காற்று ஆகிய இயற்கை மூலங்களை மாசுபடுத்தி, விளைபொருள்களில் நச்சேற்றி,அவற்றை நுகரும் மனித இனத்தை இனங்கான இயலா நோய்க் குழியில் தள்ளி, மனிதவளத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கின்றன என்பதைச் சான்றுகளோடு விளக்கி, இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு, மதிப்புறு மனிதநலம் காக்க வேண்டியதை வலியுறுத்திப் பேசினார். உயிர் உரங்கள் என்னும் தலைப்பில் மாணவர் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி வளாகத்துள் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிறைவாக தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் திரு.ஏ.வெங்கடேசு அவர்கள் நன்றியுரையாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Sunday, September 18, 2011

அழகு தங்க நகையிலா?

18.09.2011 அன்று புதுக்கோட்டை விஜய் உணவகக் கூட்ட அரங்கில், உலகத்திருக்குறள் பேரவையின் திங்கள் கூட்டத்தில்,  மாவட்டத் தலைவர் சண்முக பழனியப்பன் அவர்கள் தலைமையில், முனைவர் மு.பழனியப்பன் மற்றும் புலவர் மகா.சுந்தர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட  பாவலர் பொன.கருப்பையா அவர்களின் தமிழிசைப் பாடல்கள் நிகழ்வு நடைபெற்றது.
தமிழின் அருமை பெருமைகள், சங்க இலக்கியங்கள் காட்டும் தமிழரின் மாண்புகள், தமிழர் பண்பாடு, திருவள்ளுவர், திருக்குறளின் பெருமை, தமிழுக்குழைத்த பாரதியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் தொண்டு, தமிழுக்கு இன்றைய இளைஞர்கள் ஆற்றவேண்டிய பணி, மகளிர்க்கு அழகு எது? என்னும் பல்வேறு தலைப்புகளில் தமிழிசைப் பாடல்களைப் பாவலர் பொன்.க. இசைக் கருவிகளின் பின்னணியோடு வழங்கியது அனைவராலும் பாராட்டப் பட்டது. இவ்வரங்கில்  அழகு தங்க நகையிலா? என்னும் புதிய பாடல் அரங்கேறியது.


அழகுதங்க     நகையில்    இல்லே   முத்தம்மா-உனக்கு
அறிவுதரும்  கல்வியே    பெரும்     சொத்தம்மா
உறவுபொன் பொருளில்  இல்லை  முத்தம்மா- பிறர்க்கு
உதவும்அறச் செயலே    அன்பின்   வித்தம்மா                                   -அழகு

பொறந்தவீட்டுப்  பெருமைகளும்  புருசன்வீட்டு  அருமைகளும்
போட்டி ருக்கும்   நகையில்   இல்லே  முத்தம்மா - நீ
புடவைக்கடைக்   காட்சிப்   பொம்மை  இல்லைம்மா
புவியின்போக்கை  மாற்றுவதும்  புதிதாய்ஒன்றை  ஆக்குவதும் 
பொறுப்பாய்ச்  செயல்  புரிவதில்தான்  முத்தம்மா - நீ
புனைந் திருக்கும்  பொறுமை  கோடிச் சொத்தம்மா                       - அழகு


சேதாரம்  செய்கூலி  இல்லாத    பொன்னகையே 
சிந்தும்     இதழின்    புன்னகைதான்  முத்தம்மா - உன் 
சிரிப்புக்குமுன்     வைரம்   வெற்றுக்  கல்லம்மா
முத்துமணி  மாலைகளும்  கொத்தாய்ப்  பிறர்கைமாறும் 
சொத்தாக  நிலைப்ப  தெல்லாம்   முத்தம்மா - உன்
வற்றாத மனிதப்   பாசப்   பித்தம்மா                                                        -அழகு

நகையில்மோகம்  மாறிடணும்  நயங்கள்   மனசேறிடணும் 
நாட்டில்  பெண்கள்  கவலைதீரும்  முத்தம்மா - பெண்மை 
நாளும்  மணம்வீசும்   மலர்க்   கொத்தம்மா
மண்ணகத்துக்  கனிவளமே  மனிதகுல  விளைநிலமே
விண்ணைத்  தாண்டும்  ஆற்றல்உன்னுள்  முத்தம்மா- வெறும்
மின்னும் பொன்னால் விளையும்தீமை       மாத்தம்மா - அழகு

Friday, September 16, 2011

சொன்னாரே பெரியார்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 133 ஆவது பிறந்த நாளில் அவருடைய பகுத்தறிவுச் சிந்தனைகளில் சில துளிகள்  புதுக்கோட்டை பாவலர் பொன்.கருப்பையா அவர்களின் பாடல் வரிகளாக...

சொன்னாரே   கேட்டீயாப்பா - அய்யா
சொன்னாரே   கேட்டீயாப்பா
பகுத்தறிவே    உன்னை  உயர்த்தும்  படிகள்ன்னு
சொன்னாரே  கேட்டீயாப்பா                                                      -- சொன்னாரே

ஒழைச்சுப்      பொழைப்பவந்தான்   ஒசத்தி - மத்தவன்
ஒழைப்பிலே வாழ்பவனுக்  கிகழ்ச்சி
பிறப்பிலே    ஏதுங்கடா        பேதம் - நம்மைப்
பிரிக்கத்தான் செஞ்சுவச்சான்  வேதம்வேதமுன்னு         - சொன்னாரே

சாமிவேத சகுனம் மூடமந்திரம் - நம்மைப் 
பயமுறுத்திப் பணியவச்ச தந்திரம்
பஞ்சாங்கச் சாத்திரங்கள் மோசம் - காசு
சம்பாதிக்க அவன்போட்ட வேசம் வேசமுன்னு                   - சொன்னாரே

புளுகுமூட்டைப்  புராணங்களை  ஒதுக்கு - தமிழன் 
பண்பாட்டுக்         கதுரொம்ப          இழுக்கு
நாகரிகச்சிந்        தனையைப்           பெருக்கு- பழைய
காட்டுமிராண்டித்   தனம்               எதுக்கு எதுக்குன்னு         - சொன்னாரே

அறிவென்னும்    ஆயுதத்தைத்     தீட்டு - உந்தன் 
அறியாமைப்       பேயைஅதால்     ஓட்டு
மூடநம்                 பிக்கைகள்        ஒழிந்தால் -பல
மோசடிப்  பேர்வழிகள்   வேசம்  களையுமுன்னு                   - சொன்னாரே

சாதிமறுப்புத்   திருமணத்தை     நடத்து -நாட்டில்
சமநீதி              படருமதைத்            தொடர்ந்து
தேவையில்லாச்  சடங்குகளை  நிறுத்து - உன்னைச் 
சூத்திரன்னு       சொன்னவனைத்   துரத்து துரத்துன்னு        - சொன்னாரே

அறிவுக்குத்       தலைதாழ்த்தி        வணங்கு - உனக்கு
ஆற்றல்தரும்  செயலுக்கு நீ           இணங்கு
ஆகமத்தின்        புரட்டுகளை         ஒதுக்கு - இல்லா
ஆண்டவன்      வழிபாட்டை           நிறுத்து நிறுத்துன்னு        - சொன்னாரே







Thursday, September 15, 2011

அண்ணா-103

பேரறிஞர் அண்ணாத்துரை அவர்களின் 103 ஆவது பிறந்த நாளன்று  அவருடைய சிறப்புகளில் சில துளிகள் இங்கே பாவலர் பொன்.க அவர்களின்  பாடல் வரிகளில்....

முக்கனிச்   சாறோ    இல்லை        முத்தமிழ்   ஊற்றோ
காஞ்சிதந்த  கற்பகப்  பெட்டகம்    கண்ணுக்குள்ளே  - எந்தக்
காலத்திலும்   உங்கள்  நினைவுகள்   நெஞ்சுக்குள்ளே                          - முக்கனி

அய்யாவின்  பாசறை   தந்த  பொய்யாமணிச்  சுடர் விளக்கே
மெய்யான   பகுத்தறி  வினை உதித்ததில்  திசை கிழக்கே
பொய்யான  மூடநம்பிக்  கையைச் சுட்டெரித்த  சூரியப் பந்தே
செய்தஅருந்  தொண்டி னைப்பேச ஆண்டுநூறு ஆகுமே இங்கே     - முக்கனி

கேட்பவரைக் கிரங்க  வைக்கும் கீதமன்றோ  உனது மொழி
கேடுகளைக் குத்திக்  கிளிக்கும் சிறுகதைகள் உனது உளி
நாடகங்கள்  ஆக்கி நடித்து   நச்சுக்கொடி  வேர்கள  றுத்தாய்
நல்லதிரைக் கதைகள் தந்து நாட்டுமக்கள்  நெஞ்சில் நிலைத்தாய்  -முக்கனி

கண்ணியமாய்க் கடமை  யாற்றக்  கட்டுப்பாட்டைக்   கற்றுமே  தந்தாய்
பெண்ணினத்தின் பெருமை காக்க பெண்ணுரிமைச்  சட்டமும்  தந்தாய்
எண்ணியதை முடிக்கும்  ஆற்றல்  ஈரோட்டுக்  குகையில் பெற்றாய்
உன்னைத்தான்  தம்பிஎன்று  தினம்  ஓராயிரம்  மடல்கள்  தந்தாய்   -முக்கனி

மாற்றான்தோட்ட  மல்லிகை  யாயினும்  மணம்தந்தால்  ஏற்றிடச் சொன்னாய்
மதியில்லாக்  கயவர் செயலை  மனமதில்  தாங்கிடச் சொன்னாய்
இனம்மொழி  ஏற்றங்கள் தன்னை   எத்திசையும்  உணர வைத்தாய்
எந்தநாடும்  போற்றும் முனைவர்  பேரறிஞர்  பட்டங்கள்  பெற்றாய்  - முக்கனி

ஆண்டுஒன்று  அரைமட்டும்  நீ  ஆட்சி  செய்தாய்   தமிழகத்தை
அழகுடன்  தமிழ்நா டென்னும் பெயர்மாற்றிப்  புகழ் படைத்தாய்
ஆட்சிமொழித்  தமிழெனவே  அயல்மொழி ஆதிக்க மாய்த்தாய்
ஆரியத்தின் மாயையைக் கீறி அனைத்திலும்  தமிழைக் கண்டாய்       - முக்கனி

ஏழைகளின்  சிரிப்பி னிலே  இறைவனைக்  காணவே  எண்ணி
எண்ணிலா  நலத்திட்டங்களை  எல்லாப்பட்டி தொட்டிக்குந்  தந்தாய்
அறிவென்னும்  ஆயுதம் ஏந்து அகிலம்உன் கைகளில் என்றாய்
அண்ணாஉன்   தத்துவம்  வென்றால் அகிலமே  சிறக்கும்  நன்றாய்  - முக்கனி






Tuesday, September 13, 2011

வழிகாட்டி சமூகப் பணி மன்றம்-கல்வி பரிசளிப்பு விழா

புதுக்கோட்டை,கோயில்பட்டியில் 11.09.20011 அன்று ” வழிகாட்டி சமூகப்பணி மன்ற ”த்தின் கல்வி ஊக்குவிப்பு பரிசளிப்பு விழா, ஊர்த்தலைவர் திரு.க.சுப்பையா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் நாகராசன் , பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அடைக்கலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழிகாட்டி மன்ற அமைப்பாளர் திரு. எஸ்.ரெங்கராசு அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திரு. பிச்சை, மாரிமுத்து. ஒன்றிய உறுப்பினர் திரு.சுந்தர்ராசன், தலைமை ஆசிரியர்கள் திருமதி பெட்லாராணி, சுந்தரவடிவு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அப்பகுதியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 35 பேர்களுக்கு மரக்கன்றுகளுடன் மதிப்புமிகு பரிசுகளை வழங்கிச் சிறப்புரையினை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் நிருவாகி பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் ஆற்றினார். ஆசிரியர் பயிற்றுநர் திரு. பி.இராமன் அவர்கள் நன்றியுரையாற்றினார். மன்றத்தின் செயல்பாடுகளையும் முதல்மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் பாராட்டிப் பேசிய பாவலர் பொன்.கருப்பையா சமூக மேம்பாட்டுச் சிந்தனைகளை மாணவர்கள் வளர்த்துக் கொண்டு, தங்களையும் தாங்கள் சார்ந்த பகுதியையும்  உயர்த்த உழைக்க வேண்டும் என்று கூறினார். அன்று பாரதியாரின் 90 ஆவது  நினைவு நாளை யொட்டி ”மலருக்குள் மணமாக” எனும் பாடலை அரங்கேற்றினார்.

  1. மலருக்குள்   மணமாக   நுழைந்தா-ஏங்கும்                                                                 மனதுக்குள் இதமாகக்குளிர்ந்தாய்                                                                                     பாழ்பட்ட   சமுதாயம், சீர்பெற்றுச் செழித்தோங்க                                                       பாதந்த      மாகவியே                                                                       -மலருக்குள்

தேருக்கு  அச்சாக வேருக்கு   நீராக,                                                                                      ஊருக்கு  உழைத்திட்ட உன்தொண்டிற் கிணையேது?                                                       நேருக்கு  நேர்நின்று  நீதிக்குக்  குரல்தந்தாய்                                                                  பாருக்குள்  உன்நினைவு  மாறாது   எந்நாளும்                        - மலருக்குள்                                   

தாய்த்தமிழ்  மகளுந்தன் கவிதையின்தேரேறி                                                                       தமிழ்கூறும்   உலகெங்கும்  தளர்வின்றி வலம்வந்தாள்                                      உயர்ந்தது  தமிழ்ச்சொல்லே  எனஓங்கி  ஒலித்திட்டாய்                                    உன்பாட்டின்  கனவெல்லாம்  நனவாகும்  நிலைஎன்றோ?  -மலருக்குள் 

பெண்கல்வி மேடுறுத்தி  பேதைமை விலங்கறுத்தாய்                                   பெருமைகள் அவர்காண பெரிதும்நீ  தினம் உழைத்தாய்                           வன்மைகள்  மறைந்தொழிய  வகைநூறு  கணைதொடுத்தாய்             உண்மைக்கு உழைப்போரின்  தோள்தட்டி  இதமளித்தாய்    -மலருக்குள் 

விண்வெளி   தனைஅளக்க  வெகுண்டுநீ  முனைற்தாயே                                            பன்முகக்    கலைச்சுவையைப்  பாட்டினில்  கரைத்தாயே                                 திண்ணிய  மனத்தோடு   திரண்டதோள்   கேட்டாயே                                       எண்ணிய  முடிப்பார் நம்    இளைஞர்தம்  திறத்தாலே            - மலருக்குள்                  

சாதிக்கும்  மாந்தருக்குள்  சாதிகள்  எதற்கென்றாய்                                             ஆதிக்க   வெறிநீக்கு   அடிமைநீ   இல்லையென்றாய்                                     மோதிட்ட  உன்பாட்டு   முரசத்தின்   அதிரொலியாய்                                                      நீதிகள்   சமமாகி   நீடிக்கும்   இனிநன்றாய்-                                  மலருக்குள்

Sunday, August 28, 2011

அழகு! அழகு!!

அழகியத்            தமிழ்மொழிப்        பேணுதல்       அழகு
அயல்மொழிக் கலப்பினை           அகற்றுதல     அழகு
ஆழ்ந்தத்             தனித்தமிழ்            பற்றென்றும்  அழகு
ஆணைகள்       தமிழினில்             அமைந்திடல் அழகு                                   இனியதாய்த்   தமிழ்ப்பெயர்         இடுதலே          அழகு
இளமையில்    தமிழ்வழிக்            கற்றலே            அழகு
ஈர்த்திடும்         கலையாவும்        தமிழென்பதே  அழகு
ஈடில்லாத்         தமிழ்ப்பண்            பாடுகொள்       அழகு
உயர்தனிச்        செம்மொழித        தமிழாய              தழகு
உணர்வுடைத் தமிழராய்               வாழ்தலே          அழகு
ஊற்றெனத்      தமிழ்நூல்கள்       உருவாதல்       அழகு
ஊக்கமாய்த்     தமிழினம்               காத்திடல்         அழகு
எம்மொழி         யினும்தமிழ்          இனிதென்பது   அழகு
எங்கெங்கும்   பெயர்ப்பலகைத் தமிழாதல்           அழகு
ஏற்றங்கொள் துறையெலாம்     தமிழேறல்         அழகு
ஏற்புடை           யாவினும              இன்தமிழ்            அழகு
ஐந்திணை       வரைதந்த               அருந்தமிழ்         அழகு
ஐயன்                குறள்நெறி             வாழ்ந்திடல்       அழகு
ஒப்பிலாத்       தமிழ்க்கலை         உயர்த்திடல்       அழகு
ஒன்றானோம் தமிழ்ச்சாதி          என்பதெவ்            வழகு
ஓதும்மொழி   எல்லாம்                 தமிழென்ப            தழகு
ஓங்கிடும்         தமிழ்ப்புகழ்           உலெகெங்கும்   அழகு
ஔவிய           அயல்கூற்று        அணுகாதல்         அழகு
ஔடத             மாய்த் தமிழ்          அமைந்ததே        அழகு

Thursday, August 25, 2011

தமிழ்ப் புத்தாண்டு

எது தமிழாண்டு?  ஒரு இனத்தின் அடையாளம் அவ்வினம் பேசுகின்ற மொழியேயாகும். அவ்வகையில் இலெமூரிய கண்டத்தில் நீண்ட நெடுங்காலத்திற்கு முன் தோன்றி, கடல்கோளால் அழிவுற்று. எஞ்சியத் தமிழினம், இந்தியத் துணைக்கண்டம் நகர்ந்து, வணிகம் மற்றும் வாழ்வியல் காரணங்களால் உலகம் முழுமைக்கும் பரந்து வாழும் நிலையில், அவ்வின அழிவிற்கு பிற பேரினம் கைக்கொண்டிருக்கும் ஆயுதம் தமிழ்மொழியின் சீர்மையை இயல் வழிகளிலெல்லாம் அழிப்பது என்னும் அற்ப முயற்சி. அதன் தொடர்ச்சிதான் தைத்திங்கள் முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழினம் மூன்று ஆண்டுகளாகக் கொண்டாடிக் கொண்டிருந்த மாட்சியைக் குலைக்க,மீண்டும் ”சித்திரை - தமிழ்ப் புத்தாண்டு” என்னும்  சாணக்கிய அறிவிப்பு. இது ஏதோ முந்தைய அரசின் முதல்வர் தன்னிச்சையாக  அறிவித்த அறிவிப்பு இல்லை. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, பரிதிமால் கலைஞர் போன்ற தமிழறிஞர்கள் ” பிரபவ முதல் அட்சய” ஈறாய்  வழங்கப்பட்டு வரும் அறுபது ஆண்டுகளின் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் இல்லை. அவற்றிற்காக கற்பிக்கப் பட்ட இதிகாசக் கதைகள், தமிழர் மரபு, மாண்பு, ஆகிய பண்பாட்டுக் கூறுகளுக்கோ, அறிவுக்கோ பொருத்தமானதாக இல்லை. மேலும் அறுபது ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் குழப்பமின்றிக் கணக்கிட  ஏதுவாகவும்  இல்லை என ஆதாரங்களோடு விளக்கி, தமிழருக்கென ஒரு தொடர் ஆண்டினை அறுதியிட வேண்டுமெனப் போராடி வந்தனர். அதன் பின்னர்1921 ஆம் ஆண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் அவர்கள் தலைமையில் தமிழறிஞர்கள் கூடி ஆய்ந்து, தமிழ்மறை தந்த திருவள்ளுவர்  பெயரில் தொடர்  ஆண்டைத் தமிழ் கூறும் நல்லுலகம் பின்பற்றுவது என்றும், திருவள்ளுவர் காலம்  கி.மு.31 என்பதைத் தமிழாண்டெனக் கொள்ள முடிவாற்றப்பட்டது. அதே வேளையில் தமிழ்நாட்டின் புவியியலை ஒட்டிய  பருவமாற்றங்கள், வேளாண் தொழில், வாழ்வியல் மேன்மைகளையொட்டி  விளைந்தவற்றை இயற்கை மூலமான கதிரவனுக்குப் படைத்து, உழைப்பிற்கு நன்றிகாட்டிட ஏற்ற திங்களான ”தை” த்திங்களையே திருவள்ளுவர் ஆண்டாகியத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கத் திங்களாக கடந்த 2007ஆம்  ஆண்டு தமிழக அரசு அரசாணையாகப் பிறப்பித்துக் கொண்டாடப் பட்டு வருகிறது. இன்னும் தமிழ் மாதங்கள் என ” சைத்ர....முதல் ...பல்குனா” வரையான  சூரிய வீதியில் தங்கும் உடுக்களின் பெயர்கள் சமக்கிருத மொழியில் இருப்பதை ” சுறவம்,கும்பம் , மீனம் , மேழம்,விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை” எனத் தமிழில் வழங்கவேண்டுமெனத் தமிழறிஞர்கள் முனைந்து கொண்டிருக்கின்ற வேளையில், அரசியலிலோ, பொருளாதாரத்திலோ,  மக்கள் வாழ்வியலிலோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத  தமிழ்ப்புத்தாண்டு தை என்பதை சித்திரை என மாற்ற முயலுவது, தமிழ் உணர்வாளர்களை வேதனைப் படுத்தும் செயலாகும்  . அறிவுசால் ஆன்றோரின் மனக்குமுறலுக்கு அரசு ஆட்படும் நிலையினைத் தவிர்த்தலே அறிவார்ந்த அரசுக்கு நலம் பயக்கும்.

             தைத்திங்கள் முதல் நாளே தமிழருக்குப் புத்தாண்டு..
                                                     பாடல்.

 தைததிங்கள் முதல்நாளே தமிழருக்குப் புத்தாண்டு
           தமிழ்ப் பண்பாடோடு தமிழாநீ கொண்டாடு                              --- தைத்திங்கள்

ஞாலத்தின் முதலதொழிலாய் வேளாண்மை தனைக்கொண்டு
           காலத்தை அதன்வழியே வகுத்தானே  நம்தமிழன்
ஆடிப்பட்டம் தேடிவிதைத்து மார்கழியில் மகசூல்கண்டு
        கூடிக்களிக்கும்  நாளாய்க் கொண்டானேத் தைமுதல்நாளை -- தைத்திங்கள்
சுழல்கின்ற புவிசெழிக்க சூரியனை முதன்மை கொண்டான் 
        சூரிய வீதியில் தங்கும் உடுக்கள் பன்னிரண்டு கண்டான் 
சுறவம்முதல்  சிலைஈறாய்ச் சு ழன்றிடும் ராசிகள்பெயரைச்
        ( சுறவம், கும்பம்,மீனம்,மேழம்,விடையொடு ஆடவை, 
          கடகம், மடங்கல், கன்னி, துலை,நளி,சிலை என) 
சூட்டியே திங்களை வகுத்துச் சுறவத்தைத் தைதிங்கள் என்றான் -- தைத்திங்கள்

கார்கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில்எனக்
        காலநிலைக் கேற்பப் பொதழுதைப் பருவங்களாய்ப் பிரித்து வைத்தான் வெயிமழை குளிர்பனி கடந்து பின்பனியின் விடியல் பொழுதில் 
      விளைந்ததை இயற்கைமூல வெய்யோன்முன் படைக்கும் நாளே தைத்திங்கள்

மோகினி உருக்கொண்டு  கிருட்ணனை நாரதமுனியும்
     மோகித்துப் பிறந்திட்ட பிள்ளைகள் அறுபதன் பெயராம்
பிரபவமுதல் அட்சயஈறாய்  பெயரிட்டுத் தமிழாண்டென்னும் 
     பேதையர் புலம்பல் போக்க பிறந்ததே தமிழாண்டென்று            -தைத்திங்கள்

திங்களைப் பகுத்திட்ட திறன்மிகு தமிழ்ச் சான்றோர்
      திடமுடன் தமிழாண்டு தொடங்கிய காலம் சொன்னார்
தீங்கனிச் சுவைஊற்றாம் திருக்குறள் மறைதந்த 
      திருவள்ளுவர் ஆண்டே தமிழாண்டு எனக்கொண்டார்              - தைத்திங்கள்